Monday, 3 October 2011

நரபலி .

   .
                                                           

ஏதுக்கு இத்தனை கோபம் உனக்கெந்தன் மேல் அய்யா?
மோதிக்கு தொப்பி பரிசளித்தவரும் மனிதன் தானய்யா!! 

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை  அல்லவா சத்பாவனையின் அர்த்தமே!
தொப்பி வேண்டாம் பொன்னாடை தாரும் ,சொல்வது சத்பாவனையா ? ச்வார்த்தமா?

உண்மையை காட்டி கார்ட்டூன் வரைத்தால்,
அது குற்றம்,என்று அரசாங்கம் நினைத்தால்?

குற்றம் உள்ள நெஞ்சம் குறு குறு என்கிறது.
குறுக்கே வந்தவனை சிறைக்குள் எறிகிறது.

சஞ்சீவ் பட் நடந்த உண்மையை சொன்னார்,
தெளிவும் அவர் கைவசம் இருக்குது என்றார் .

பதவி போய்விடும் என்ற பயமோ என்னவோ
சஞ்சீவை சிறையில போடும்  நோக்கமோ ?

நம்ம பாரதம் உண்மையில் ஜனநாயகமா?
எதிர்த்தவன் உயிருக்கே கொலை நடுக்கமா!!

பதவி பிரமாணம்!!சொல்வதெல்லாம் கம்பீரமே!
பதவியில் வந்ததும் செய்வதெல்லாம் விபரீதமே!

மக்களின் திண்டாட்டம் சாப்பாட்டு பஞ்சம்,
மந்த்ரியின் கொண்டாட்டம்,கைநீட்டி லஞ்சம்.

குட்டை குளம் அத்தனையும்  அடுக்கு மாடியாய் மாறுது,
மழை இல்லாமல் பூமியும் வறண்டு வெடித்து போகுது.

தண்ணீர் மட்டம் இறங்கி போய் ,குடிக்க தண்ணீர் குறையுது,
கடல் தண்ணீர் உள்ளே புகுந்து  உப்பு தண்ணீர் ஏறுது..

தாய் மண்ணை வெட்டி கீறி ஒபரேஷன் நடக்குதே,
மண்ணெல்லாம் தோண்டி நோண்டி வெளிநாட்டுக்கு கடக்குதே!

பூமி தன் விதியை நினைத்து பார்த்து விழிக்கிறாள்,
கொடுமை தாங்காமல் குலுங்கி குலுங்கி அழுகிறாள்.!!!

கலியுகத்தின் கண் கண்ட காட்சிதான்  நரபலி  ,
பூகம்பம் தாக்கும் இயற்கையின் எதிரொலி!!
சுபம் .
ஜெயம்.
2-10-2011

 

Tuesday, 27 September 2011

அரசியல் நெருக்கடி.


                


சங்கடமான அரசியலை விட்டு சன்யாசம் தேட போறேன் ,
ப.ஜ.காவின் அட்டஹாசம் தாங்காமல் ஓட போறேன்.

ஓடி ஓடி  உழைக்கணம் ,லஞ்சத்தை ஒழிக்கணம்,
அண்ணாவை போலவே நானும் ஆண்டியாக வாழணம்.

கூட்டணி கக்ஷி தொல்லையோ ,போதுமடா சாமி,
போதாகுறைக்கு குழிதோண்டும் சுப்ரமண்யம் சாமி!!


பிரணாபின் நியூயார்க்பிரயாணம்,திடுக்கிடும் அவசியமோ?
பிரணாப்  பிரதமர்  சந்திப்பும் ஒரு சிதம்பர   ரகசியமோ?


பூனை போல் பதுங்கும் நம்ம பிரதமர் மௌன சிங்கை பாரு,
சிதம்பர ரகசியம் கேட்டால் புலியை போல பாய்கிறார் பாரு.

சிதம்பரத்தை எதிர்த்து விட்டால் பிரதமர் கோபம் கொள்வதேனோ?
சிதம்பரத்தின் ராஜினாமா பிரதமர் மறுப்பதும் ஏனோ?
 
சிதம்பரம் தன் குற்ற சம்மதம்  ஏற்று சொன்னால்,
பிரதமரும் அதில் மாட்டி கொள்வாரோ   பின்னால்?


சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்திருந்து பாப்போம்
அரசியல் வாதிகளின் விதியை துணிச்சலுடன் ரசிப்போம்.

கை நிறைய பணம் கிடைத்தால்,போதும் என்று சொல்லும் மனிதனும்  இல்லையே ,
வயறு நிறைய சோறு போட்டால் வாய் நிறைய வாழ்த்தாத மனிதனும் இல்லையே!!

சுபம் .
ஜெயம்.
28-9-2011

Thursday, 22 September 2011

காற்றா? காட்சியா?


            

 குளித்தேன்  குறி இட்டேன் ,பொன்னாடை அணிந்தேன்,
அமர்ந்தேன் த்யானத்தில் தர்பாசனத்தில்.

பூஜைக்கு கையில் பூ எடுத்தேன்,பூ மணம் வீசவில்லை.
சீரியல் ஓலி ஒன்று கணிர் என்று காதுக்குள் வீசுது.

மனம் அலை பாயுதே பக்கத்து அறைக்குள்.
எட்டி எட்டி பார்க்க மனம் துள்ளி விளையாடுதே,

என்னவென்று அறியாமல் மண்டையும் வெடிக்குதே!
பஞ்சாங்கம் பார்க்கும் சாக்கில் அறைக்குள் நுழைந்தேன்,

அம்மா பார்க்கும் "அம்மக்கிளி" மறைந்திருந்து பார்த்தேன்.
மலையாளம் கும்குமப்பூ பார்க்காமல் விடுவேனா?
அம்மாவுக்கு தெரியாமல் ஓரக்கண்னால் பார்ப்பேனே!

ஹரிச்சந்தனத்தில் மகாதேவன் படுபாவி வில்லனாம்,
உண்ணிமாயை என்ற பெண்ணோ பாவம் ஒரு அப்பாவி.

காலை முதல் இரவு வரை,தமிழ் சீரியல் பார்ப்பேன்,
பாத்து பாத்து சில சமயம் பாத்த படமே பார்ப்பேன்.

மொத்த படவும் பார்த்துவிட்டு என்னத்தை கண்டேன்?
பார்த்த படம் ஒன்றுமே ஞாபகவும் இல்லையே!

சீரியல் பார்த்துவிட்டு பித்து பிடித்த மனநிலை,
கொஞ்சநேரம் நடக்க போகவேண்டும் என்று தோன்றுது .

நான் போனவுடன் என் இடத்தில அம்மா வந்து அமருவாள்,
மணி கணக்கில் அவள் விரும்பி அரசியல் படிப்பாள்.

நெஞ்சத்தை தொட்டு சொல் அஞ்சாத மனமே,
காற்று உள்ளப்பவே தூற்றவா? காட்சிக்கு விலை கொடுக்கவா?

காற்றுக்கு என்ன பஞ்சம் ,மூச்சு விட்டால் காற்று தான்,
கண் இருக்கும் வரை தானே  காட்சியின் விலை மதிப்பு!

சின்னம் சிறு அசைகள் சிறகடிக்கும் அசைகள்,
உயிர் உள்ளவரை ஊட்டலாம் கண் குளிரும் காட்சியை.

உன் மனசாக்ஷி சொல்லுதேன் என் அருமை மவனே,
வாழ்க்கையின் மகிழ்ச்சியே கண் குளிரும் காட்சிதான்.

ஜெயம்.
23-9-2011

Sunday, 18 September 2011

உபவாஸ உண்டியல்.


     

மக்களே கேளுங்கள் முக்யமான செய்தி ஒன்று,
மோதியின் உபவாஸ வாசலில் ராக்ஷச உண்டியல் ஒன்று,

பூகோள வடிவில் இருக்குதாம் அந்த உண்டியல்,
கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் வார்த்தை,

"சத்பாவனாவுக்கு அளிக்கும் உங்கள் சம்பாவனை "
போடுங்கள் உண்டியலில் பரந்த மனதுடன்,
மூன்று நாள் மட்டுமே தரப்படும் அவகாசம்.

ராக்ஷச உண்டியல் ஒன்று துளும்பினால்,
மற்றொரு ராக்ஷசி உண்டியலை வைப்போம் மக்களே,

யோசிக்காமல் போடுங்கள் உங்கள் நன்கொடை அத்தனையும்,
உண்டியலின் சாவி மோதியின் கைவசம் .
இது உங்கள் தலைவர் மோதியை போய் சேரும் அவகாசம்!!!

வந்தவர் அத்தனை பேருக்கும் சன்மானம் உண்டு ,
மோதியின் படம் போட்ட பிளாஸ்டிக் மோதிரம் ஒன்று.

மக்களே முந்துங்கள்,மோதியின் மோதிரம்,
அணிந்துவிட்டு பாடுங்கள் மோதியின் ஸ்தோத்திரம்.

"ஜெய் ஜெய் ஜெய் மோதியின் முட்டாள் மக்களே!
மூன்று ரூபாய் மட்டுமே மோதியின் மோதிரம்."
சுபம்
ஜெயம் .19-9-2011

மதம் பிடித்த மதம்


         
யானை மதம் கொண்டால் ஓடுமாம் பின்னோக்கி,
மனிதன் மதம் கொண்டால் ஓடுகிறான் முன்னோக்கி

அப்பாவி மக்களோ பொசுங்கி போகிறார் ஓடும் ரயிலில்,
பழிக்கு பழி ஒரே பல்லவி குஜராத் கலவரம் வீடுகளில்,

எல்லா மக்களும் ஒரு தாய் பெற்ற மக்கள் தானே ,
ஆண் ஜாதி பெண் ஜாதி இந்த இரண்டு ரகம் தானே,

ஹிந்து முஸ்லிம் என்று தேவையில்லாமல் மோதி,
பாவம் மோதி என்ற நரேந்திரனின் பட்டினி செய்தி,

கேட்டிர்களா இந்த புத்தம் புதிய புளித்த செய்தியை?
மோதியின் பட்டினி வரலாற்றின் நீண்ட லிஸ்ட்டை ?

அஞ்சு கோடி செலவில் பிரம்மாண்ட பந்தலில்,
எயர் கண்டிஷனும் பாஞ்சு மெத்தையும் பக்கத்தில்

நாடி பிடிக்க டக்ட்டர்கள் பத்துபேர் கூட்டத்தில்,
காலை பிடித்துவிட சம்ச்சாக்கள் நாலுபேர் போட்டியாம்,

எதுக்கப்பா மோதி உன்னுடைய இந்த கபட நாடகம்
தப்பு செய்தால் போது மன்னிப்பு தானப்பா ச்லாக்யம்.

புளித்து போய்விட்டது மந்த்ரிகளே உங்கள் நாட்டியம்,
முழித்து கொண்டு விட்டோம் ,போதும் உங்கள் ஆட்டம் .

பணமும் குமியுது மலைபோல் உங்களுடன் பாபமும் குமியுது ,
குவித்த பணமெல்லாம் ,சி.பி .ஐ.கையில் அல்லவா சிக்குகிறது

கேள்விமேல் கேளிவி கேடடு ,திண்டாடுகிறதே உங்கள் மூச்சு,
ஒழுக்கமாய் வாழ்ந்து விட்டால்,வேண்டாமே வீண் பேச்சு .

கும்பலில் கைவீசி,கும்பலுக்கு கை கூப்பி ,ஆகிவிட்டாய் நீ கோமாளி,
கும்பலின் வரிபணத்தில்அல்லவா உன் இந்த கோமாளி வேஷம்?

ரொம்பநாள் செல்லாது அப்பனே உன் வேஷமும் பித்தலாட்டமும் ,
தாமதம் இல்லாமல் வந்துவிடும் உங்களுக்கெல்லாம் சிறைவாசம்.

கொட்டாரம் வாழ்க்கை என்ன,கை சொடக்கில் கிட்டும் சேவை என்ன!!
எல்லாமே ஒரு கனவாய் மாறிவிடும் அப்பனே சிறையின் இருளில்!!!
ஜெயம்.18-9-2011


Tuesday, 19 July 2011

ஆனந்த சிலந்தி.

              
       


குறுக்கும் நடுக்கும் ஓடுதாம் சிலந்தி பூச்சி
மிகவும் சிறப்பாக பின்னுதாம் நெட்வர்க்.

வலையின் அமர்ந்து செய்யுதாம் த்யானம்,
கண் ஒன்றை மூடி மறு கண்ணை திறந்து,

வலை வீசி காக்குதாம் இரையை பிடிக்க,
தானாக  சிக்குகிறது சிலந்தியின் இரைகள்.

மாட்டித்தாம் இரைகள்  ஆயிர கணக்கில்,
சிலந்திக்கோ கொண்டாட்டம்,இரைக்கோ திண்டாட்டம்.

கெட்டி போட்டுதாம் ஆண் பெண் பாராமல் ,
உடம்புக்கே ஸ்வந்தமான பசையான நூலால் .
             
வலையில் சிக்கி தவிக்குதாம் இரைகள்,
மாட்டி கொண்டோமே இனி என்ன செய்வது?

ஆனந்தம் பரமானந்தம்,சச்சிதானந்தமாம்,
சிலந்தியின் அவதாரமோ நித்யானந்தனும்?

பவனி வருகிறான் ரத்ன சிம்ஹாசனத்தில்
கையில் ஒரு தண்டமும்,வாயெல்லாம் பல்லுமாய் .


தங்க கிரீடமும்,பட்டு வேஷ்டியும் தரித்து,
அசட்டு சிரிப்புடன்,பெண்களை பார்ப்பதும்,

அய்யோ கடவுளே அருவெறுப்பா இருக்குதே
சிறையில் கிடந்தும்  திருந்தவில்லையே என்?  
         
குண்டலினி சக்தியால்,மிதக்க வைக்கிறேன்,
வஜ்ராசனத்தில் அமர்ந்து குதியுங்கள் ஷீடரே

விரித்த முடியுடன் ஆவேசமாய் ஆடுங்கள்,
கழுத்து சுளுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

தவக்களை போல் குதித்து வாருங்கள்,
குதூகலத்துடன் என் பக்கம் வாருங்கள்,
குண்டலியின் சக்தி உங்களுக்கே தெரியும்.

கங்காருவை போல் உயரத்தில் குதியுங்கள்,
அத்தனை பேரையும் ஆலிங்கனம் செய்கிறேன்.


வானில் மிதக்கலாம் , பறவை போல் பறக்கலாம்,
குண்டலினி சக்தியால் சொர்கமே போகலாம்.

அத்தனை பேருக்கும் அனுபவம் ஆனந்தம்,
ஒத்தர் ஒத்தர் ஆக என் அறைக்குள் வாருங்கள்.

காட்டுகிறேன் என் ஞான திருஷ்ட்டியால்,
உங்களுக்கெல்லாம் என் விஸ்வரூபத்தை.!!

மக்களே உங்களுக்கு புத்தியே இல்லையா?
ஏமாந்து போகவே ஜன்மம் எடுத்தீர்களா?

காவி அணிந்தவர் கடவுளா என்னா? 
உதர நிமித்தம் பஹு கருத வேஷமாம்.

ஏமாந்த மக்கள் இருக்கின்ற காலம்,
எமாத்துவதற்கே இந்த காவி வஸ்த்ரம்.

விழித்து கொள்ளுங்கள் மக்களே சீக்ரமாய்,
கிழித்து விடுங்கள் அவன் போலி வேஷத்தை

ஜெயம் .
20-7-2011.

Tuesday, 12 July 2011

தூளி .

                             
                    
                    

 பனிமழை பெய்யுது இலையெல்லாம் முத்துக்கள்.            
கதிரவன் உதித்ததும் வைரம் போல் மின்னுது.

காலை வேளையில் தோட்டத்தில் சென்றேன் ,
ஜில் என்ற காற்றுடன் காலாற நடந்தேன்.

 
முடியும் பறக்குது,கண்ணை மறைக்குது,
கதிரவன் வந்ததும் தென்றலும் மறையுது.


காலாற நடந்தேன் தெருவோரமாக,
மண்தோண்டி டிராக்டரும் வந்து விட்டது.
அஸ்திவாரம் போட்டு ,அடுக்கு மாடி கெட்ட.


பெரியாள் நாலு பேர்,சித்தாள் ஆறுபேர்.
சோத்து  மூட்டையுடன் வந்து விட்டார்கள்.


இடுப்பில் குழந்தையும் தலையில் பாண்டுமாய்
சோத்து தூக்குடன் வந்தார்கள் சித்தாள்.

கடப்பாறையும் ஏந்தி,தலைப்பாவும் சுத்தி,
பீடியும் கையுமாய் வந்தார்கள் பெரியாள்.


போடுடா மணலை,சிமென்ட்டுடன் கலந்து ,
தண்ணீரை ஊத்தி கலவையை கூட்டுடா.

மம்மட்டியுடன் வந்தான் சிறுவன் ஒருவன்,
மிடுக்குடன் கலந்தான் கலவையை களிப்பாக ,

சித்தாளை கூப்பிட்டு ,தலையில் வைக்கிறான்,
சித்தாளும் பாண்டுடன் படி ஏறி செல்கிறாள்.

பக்கத்தில் மரகொம்பில் தொங்குதாம் ஒரு தூளியும்.
பச்சை குழந்தை ஒன்று தூங்குதாம் தூளியில்.

கொளுத்தும் வெய்யிலில் ,மரத்தின் அடியில்,
தௌட்டு கலர் நாயொன்று காக்குதாம் காவல்.

குழந்தை அசைந்தால்,நாய் வாலை அட்டுமாம்.
குழந்தை அழுதால் நாயும் அழுமாம் வானத்தை நோக்கி.
நாயின் ஊளையை கேடடு,மார் கெட்டி விடுமாம்,
சித்தாளும் வந்து தாய் பால் கொடுப்பளாம்.
குடிப்பதை நிறுத்தி சிரிக்குமாம் குழந்தை.

கைகளை தூக்கி நாயுடன் விளையாடுமாம்,
நாயும் குழந்தையை ஆசையுடன் நக்குமாம்.

சட்டென்று சித்தாளும் மூடுவாள் முந்தானையை,
குழந்தையை  தூக்கி போடுவாள் தூளியில்.

தூக்கில் இருந்து சோத்தையும் எடுப்பாள்,
நாய்க்கு முதல்லே சோத்தை போடுவாள்.
மிச்சம் உள்ளதை அவளும் தின்பாள்.

ஏழை குழந்தைகள் வளரும் இவ்விதம்,
வெய்யிலும் மழையும் பொருட்படுத்தாமல்.

சேத்திலும் புரளும்,மணலிலும் உருளும்
மற்று பசங்களுடன் சண்டையும் போடுமாம்.

தாய் திரும்பும் வரை வேறு என்ன வேலை?
படிப்பதும் இல்லையே பள்ளியில் சென்று.

தீவர வாதிகள் ஆக பிறப்பதும் இல்லை,
சூழ்நிலை ஒன்று தான் காரணம் அதற்க்கு.

கிடைப்பதில்லை தாய் தந்தையின் அன்பு ,
வீட்டில் எப்பவும் சண்டையும் சச்சருவும்.

கும்மாளம் அடிக்கிறான் குடித்து விட்டு ,
அப்பனாம் அவன் ஸ்வய போதமில்லாமல்.

வீட்டைவிட்டு ஓடுறான் பையனும் ஒருநாள்
தீவர வாதியின் பிடியில் சிக்குகிறான்.

அறியாத வயதில் இரையாகி விடுகிறான்,      
தாய் தந்தையின் ஞாபகமே இல்லாமல்.

பணமும் பயிற்சியும் சேர்ந்தே கிடைக்குது
துப்பாகியால் எப்படி சுட வேண்டும் என்று.

ஒருநாள் எதிரியின் கைதியாகி விடுகிறான்,
தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறான்.

தூளியில் தொங்குகிறான் பச்சிளம் வயதினில் ,                 
தூக்கில் தொங்குகிறான் தீவரவாதி ஆனபின்

குடிபோதையில் இருந்த ராமராஜரும்
ஒய்வு பெற்ற ஒரு ராணுவ வீரராம்.

சுவர் ஏறி குதிச்ச சிறுவன் தில்சனை
காரணம் இல்லாமல் சுட்டு கொல்கிறார்.

சின்னம் சிறு பய்யன் தில்சன் என்றவன்,
இரையாகி விட்டான் துப்பாக்கி சூட்டுக்கு.

துப்பாக்கியை தூக்கி கூவத்தில் எறிந்தார் ,
தில்சனின் சிநேகிதன் பார்த்துவிட்டான் அதை.

மாட்டினார் போலீசில் ,கைதாகி விட்டார்,
தூக்கில் தொங்குவார்  அவர் கூடிய சீக்ரம்.

கத்தினாள்,கதறினாள் தன் மகனுக்காக,
பொணம் ஆகி விட்டானே தன் மகன் என்று.

பதாம் பருப்புடன் வீட்டிற்கு வருவான்,
பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது.

துள்ளி குதிச்சு அள்ளி அள்ளி கொடுப்பான்.
தூளியில் போட்டு தாராட்டிய என் மகன்.



ஜெயம்
13-7-2011.

Saturday, 9 July 2011

புதையல் .

         
          

பத்மநாபசாமி  கோயில் ஒரு புராதன மந்திர்
அனந்த பத்மநாபன் படுத்திருக்கும் கோலம்,

அனந்த சயனமாக படுத்திருப்பார் விஷ்ணு,
பார்ப்பதற்கே மிகவும் பரவசமான தோற்றம்

வரிசையில் நின்று தான் சுவாமியின் தரிசனம்,
மூன்று வாசல் வழியாக மூர்த்தியின்  தரிசனம்.

ராஜாதி ராஜாக்கள் பரித்த நம் கேரளம்,
ராம ராஜ்ஜியம் போல் திளங்கி நின்றது.

வெளிநாட்டுடன் செய்தார்கள் வியாபரம்
முந்திரி பருப்புடன் மற்று மசால் பொருட்களும்

ஏற்றுமதி செய்தார்கள் கப்பலில் சென்று,
ஏலக்காய்,கிராம்பு பட்டையும் ஓமவும்.

இறக்குமதி செய்தார்கள்  தங்கமும் வைரமும்,
பலவிதமான  பெல்ஜியம் கற்களும்.

வித விதமாக நகை நட்டு செய்தார்கள்,
பத்மநாபஸ்வமிக்கே அர்ப்பித்து விட்டார்கள்.

மார்த்தாண்ட வர்மாவும் பின் வந்த ராஜாவும்,
பத்மநாபாசாமியின் ஆழ்ந்த பக்தர்களாம்.

சிறப்பாக ராஜ்ஜியம் பரித்தார்கள் எல்லோரும்,
பிரஜைகளும் வாழ்ந்தார்கள் குறை ஒன்றும் இல்லாமல்,

பக்தர்கள் எல்லாம் அள்ளி கொடுத்தார்கள்,
விஷ்ணுவின் பாதத்தில் அர்ப்பணித்தார்கள்.

தங்கமும்,வைரமும்,வெள்ளியுமாக,
தங்கத்தால் சிலைகளும்,வைரத்தால் ஹாரங்களும்,

மூட்டை மூட்டையாக தங்க காசுகளும்,
தங்கத்தில் பாத்ரமாம்,வெள்ளி தட்டுகளாம்,

ஆங்கிலேயன்  கையில் சிக்காமல் இருக்க.
பாதாள அறைகள் பணிதாராம் கோயிலில்,

ஒவ்வொரு அறையிலும் புதையலை வைத்தாராம்,
இரகசிய பூட்டுடன் அறைகளை மூடினார்.

பல்லாண்டு சூக்ஷித்த புதையல் அத்தனையும்,
பரிசோதனை போட்டுதாம் தற்போது சுப்ரீம் கொடதி !!!

ஒரு லக்ஷம் கோடிக்கு  மேல் மதிப்பாம் அதன் விலை,
வைத்த கண் வாங்காமல் பார்க்குதாம் அரசியல் வாதிகள்.

ராஜாக்கள் சூக்ஷித்த அத்தனை பொருள்களும்,
கண்மூடி திறக்கும் முன் மாயமாய் மறைந்திடும்.

ஒரே ஒரு நொடியில் ச்விச்ஸ் வங்கி சென்றிடும்.
லோக்பால் பில்லும் வராமலே போய்விடும்

அண்ணாவை போல் ஒரு தேச த்யாகியின்,
போராட்டம் காணுமா பாரதம் வெற்றியை?

மந்த்ரிகளின் பதவியோ மக்களின் பிச்சயாம்,
தீர்ப்பு அளிப்பதோ மந்த்ரிகளின் சட்டமாம் .

கொள்ளை அடிப்பதற்க்கா மக்களின் வோட்டு ?
உண்மையை சொன்னால் கசக்குமா என்ன?

ஏழைகள் எத்தனை பிச்சை எடுக்கிறார்கள்?
தெருவிலேயே படுத்து தூங்குகின்றார்கள்.

மந்த்ரிகள் அனைவரும் கூத்தடிக்கிறார்கள்.
கன்னியும் கள்ளுமாய் ஹோட்டல் அறைகளில் .

பொது நலம் என்று பணம் பறிக்கிறார்கள்,
ச்வயநலம் மட்டும் தான் மிஞ்சுது உண்மையில் .

உண்மையை சொல்லி விளக்கம் கெட்டால்,
பதவி என்ற பாணத்தால் அடக்குகிறார்கள் மக்களை.

துணிச்சலுடன் முன்வந்து எதிர்க்கும் மக்களை,
கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் இவர்கள்.

ஜாக்ருதை மக்களே மிகவும் ஜாக்ருதை,
நம்பவே கூடாது மந்த்ரிகளின் வார்த்தையை.

பேசி பேசியே கழுத்து அறுக்கிறார்கள்,
வெளி வேஷம் வெள்ளை,அடிப்பதோ கொள்ளை.

அம்சமாக ஒன்றும் செய்வதும் இல்லை,
வம்சத்தின் வ்ருத்திக்கு மட்டுமே  லாயக்கு.!!!
ஜெயம் .
10-7-2011

Friday, 8 July 2011

குரோய்டன் பார்க்

                 
         
ஏன் வீட்டு பக்கத்தில் அழகான பார்க் ஒன்று
வாக்கிங் முடிந்தபின் களைப்புடன் வருவேன்,,
பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.

நாயுடன் வருவான் வெள்ளையன் ஒருவன்,
கறுப்பு கவர்ஒன்று கையில் சுத்தி இருப்பான் .

வெள்ளையனும் பார்கிலே நாயுடன் ஓடுவான் ,
நாயும் ஓடுமாம்,மிக உத்ஸாகத்துடன்,

திடீரென்று நாயும் நின்றபடியே நிற்குமாம்,
இழுத்தாலும் நகராமல் பிடிவாதம் பிடிக்குமாம்,

குனிந்த தலையுடன் தட்டாமாலே சுத்துமாம் ,                                   .
மோப்பம் பாத்து  விட்டு அப்பியும் போடுமாம்.

வெள்ளையனும் அஞ்சாமல் கவறுக்குள் போடுவான்,
ஒரு கையில்  நாயும் மறுகய்யில் பீயுமாய்,
வெள்ளையன் போவதை  வேடிக்கை பார்ப்பேன்.

நாய் வளப்பதெல்லாம் சுலபம் இல்லை இந்நாட்டில்,.
சட்டம் ஒன்று இருக்குதாம் இந்நாட்டு கவுன்சிலில்,

ராத்திரி வேளையில் நாய் குரக்கலாகாது, ,
நாயும் ப்ரீயாக தெருவில் அலைய கூடாது,

நாயின் கழுத்திலே சிப் ஒன்று இருக்குமாம்,
சிப்பிர்க்குள் நாயின் ஜாதகமே இருக்குமாம்..

நாய் தொலைந்து போனாலும் கவலை ஒன்றும் இல்லையே ,
சிப்பிருக்கும் வரை நாய் வீடு திரும்புமாம்..

வீடடுக்கு வீடு கிழவிகள் இருக்கார்கள்,
கிழவிகள் எல்லாம் ஒண்டி கட்டைகள்.
நாய் ஒன்று இருக்கும் ,கிழவியின் வீட்டில்,
நாய் மட்டும் தான் கிழவியின் காவலன்.

கிழவிகள் நாயுடன் வாக்கிங் போவார்கள்,
கிளப்பில் சென்று அங்கே பௌலிங் ஆடுவார் .
கிழவிகள்க்கெல்லாம் பாய் ப்ரெண்டும் உண்டு.
எல்லோரும் சேர்ந்து கும்மாளம் அடிப்பார்
கிளப்பிலே சாப்பிட்டு குடிப்பதும் வழக்கம்

கிழவிகள் எல்லாம் போவர்கள் பார்லரில்,
பேசியல் செய்து பளிச்சென்று வருவார்கள்.

நாய்களும் பிரென்சுடன் விளையாடி பழகும்,
யஜமானர் வந்ததும் அவருடன் போய் விடும்.

நாயை குளுப்பாட்டி நட்டுள்ளே வச்சாலும்  
பீ தின்ற போகாதாம்  இந்த ஊர் நாய்கள்.
ஜெயம்
8-7-20

Monday, 27 June 2011

அமுக்கு


                        

அந்த காலம்  அது ஒரு பழமையான பழக்கம்,
மாதம் ஒரு முறை விளக்கெண்ணை பழக்கம்.

குச்சியும் கையுமாய் பக்கத்தில் நிற்பார் என்  அப்பா,
விளக்கெண்ணெயும் எடுத்து வருவாள் என் அம்மா,

விளக்கெண்ணை கண்டால் வரும்  எனக்கு வாந்தி
சண்டி ஆட்டம் போடுவேன் ,கைகளால் மாந்தி,

கோபம் கொண்டு அப்பா என் மூக்கை பொத்துவார்,
மூக்கை பொத்தினால் வாயும் திறக்குமே!
எத்தனை கூர்மயாம்  அப்பாவின் மூளையும்,,
அப்பாவின் அப்பாவும் இதை தான் செய்தாரோ?

ஊத்துடி சீகிரம்  விளக்கெண்ணையை வாயில்,
அம்மாவும் என் வாயில் எண்ணையை ஊத்துவாள்.

ஊத்தின எண்ணை அத்தனையும் நான் துப்புவேன்,,
கோபத்துடன் அடிப்பார்,குச்சியால் என் அப்பா!

திரும்பவும்  அம்மா இரண்டு அவுன்சுடன் வருவாள்,
மூக்கை பொத்தி  வயத்துக்குள் இறக்குவாள்.

எழுப்பி விட்டு  என் முதுகில் தட்டுவாள் ஒருபுறம்,
அழுதுகொண்டே ஓடுவேன்  நான்  பின்புறம்.

நம் பிரதான மந்தரியும் எனனை போல் தானோ?
வாய் திறக்காமல் படுத்தி எடுப்பாரோ?

சுனாமி வந்தாலும் ,பூகம்பம் வந்தாலும்,
அமுக்காக நிற்கிறார் வாய் திறக்காமலே !!

அதிசயம் தான் போங்க பிரதமரின் கரிசனம் ,
தலைப்பாகும்  தாடியுமாய் அவரது தரிசனம்.


வாய் கிழிய கத்தினார்கள்,அண்ணாவும் ராம்தேவும்
உண்ணாவ்ருதம் கொண்டார்கள் தலைவர் இருவரும்,
பிரதமரின்  வாயிலோ கொழக்கட்டயா என்ன?

விளக்கெண்ணை தந்திரம் தான் பிரதமரின் மந்த்ரமோ?.
மூக்கை பொத்துங்கள் பலமாக பிரதமரின்,
தானாக திறந்திடும் அவர் வாயுடன் குரலும்.

பொத்திய மூக்குடன் பேச்சை துடருவோம்,
பிரதான மந்த்ரியின் வாயை கிளறுவோம்.
,
அண்ணாவும் ராம்தேவும் அம்பு விட்டார்கள்,
ஊழலை ஒழிக்கும் உண்ணாவ்ருதத்தால் 

பிரதான மந்தரியும் நமக்கென்ன வம்பென்று
ஊழலை காக்கிறார் மௌன விருதத்தால்.

எப்படி இருக்குதம்மா நம்ம ஊர் செய்திகள்
நம்ம ஊர் ஏழைக்கு  இல்லையா வசதிகள்?

நாளுக்கு நாள் விலை வாசி  ஏறுது,
எரி வாயு விலையோ வானத்தை தொடுது,

வெக்கமே இல்லையா மந்த்ரி வர்கமே!
பக்கம் பக்கமாய் போடுதே உங்கள் ஊழலை.!

காலணா செலவில்லாமல் ஓடுதே உன் குடும்பம்,
கிடைப்பது எல்லாமே  உனக்கு ஓசியில் தானே!

சம்பளமும் அதிகம் கிம்பளமும் யதேஷ்டம் 
யோக ஜாதகம் தான் உங்களின் அதிர்ஷ்டம்

வரி  கெட்டாமலே பணத்தை குவிக்கலாம், 
ச்விச்ஸ் வங்கி தான் இருக்கவே இருக்கே!

ஜெயம்
28-6-2011


    .






 

Tuesday, 21 June 2011

சாபம்


          
           

ஒரு தாய்க்கு   நான்   சேயாக,பிறந்தேன்,
ஒரு சேயிக்கு நான் தாய் ஆகி விட்டேன்.

தாயும்  சேயுமான உலகம் ஒரு மாயை தான்
மாயையில் மலைபோல் தேவைகள் உண்டு.

தாய் நாட்டை விட்டோம் ,பிற நாட்டில் வந்தோம்,
பிறந்த நாள் கொண்டாட்டமோ தாய் ஹோட்டலில்.

எல்லோரும் விரும்புவதும் தாய் சாப்பாடு தான்.
உப்பில்லா பண்டங்கள்,தேங்காய் பாலுடன்.
காரவும் இல்லை,புளிப்பும் இல்லையே,
வேகாத காயுடன் ,தாளித்து கொட்டாமல்
பார்த்தாலே பசி தீரும் வருவதை கண்டால்.

என்னவோ தெரியலை,எனக்கு மட்டும் ஏனோ ?
உமிநீர் ஒழுகுது சரவணாவை நினைத்தால்.

வாரம் ஒரு முறை சரவணாவில்செல்வேன்,
பழமுதிர் சோலையில் காய் வாகியப்பின்,.

 சோளா  பட்டுரா  குறுமாவுடன் ஒரு ப்ளைட் ,
ஸ்ட்ரோங் ஆன பில்ட்டர் காபியும் ஒரு கப்.

மிடுக்குடன் நடந்தேன் பைகளும் ஏந்தி,
பிடுங்கி எடுத்தார்கள் ஆட்டோவும் உந்தி.

ஏறுங்கள்  தாயே வயதாகி விட்டதே,
சொல்லுங்கள் தாயே எங்கே போகணும்?

தாருங்கள் தாயே உங்கள் இஷ்டப்படியே,
மினிமம்  கூலி ரூபாய் ஐம்பது மட்டுமே.

 வந்தாகி விட்டதே  நான் பாதி தூரம்,
 நடந்தே போகிறேன்,மிச்சம் தூரமும்,

அஞ்சு ரூபாய்க்கு வருவையா ஆட்டோ ?
அதிகமாய் யாரையும் ஏத்தவும் மாட்டாய்.

போடி பாட்டியம்மா சாவு க்ராக்கியே
ஆட்டோ என்னா உன் பாட்டனின் சொத்தா?

அஞ்சு ரூபாய்க்கு எவனடி ஏத்துவான்?
நெஞ்சத்தில் ஈரம் இருக்குதா உனக்கு?

கொளுத்தும் வெய்யிலில் போயேன் நடந்து,
மயங்கி விழுந்தால் எனக்கென்ன வந்தது!

உன்னுடன் பேசி ஏன் கிராக்கியும் போச்சு,
கொள்ளி பிசாசே நீ எக்கேடும் கெட்டு போ.

அவனுடன் பேசி வெய்யிலும் மூத்தது,
திரும்பவும் எனக்கு பசியும் எடுத்தது.

நடந்தேன் வேகமாய் கால்களை நீட்டி,
சப்பலும் அறுந்தது கல்களில் தட்டி.!

காய்கறி பையுடன் ,சப்பலும் கையுமாய்,
வீட்டில் நுழைந்தேன் மயங்கி விட்டேன்.

விழித்து கொண்டதும் நினைத்து பார்த்தேன்,
ஆட்டோககாரனின் சாபமோ என்னவோ!


ஜெயம்.
22-6-2011

Monday, 20 June 2011

இக்கரைக்கு அக்கரை பச்சை.




பாலூட்டி வளத்த கிளி
பவிழ  வாய் அழகு கிளி !

கடல் கடந்து பறந்த கிளி,
 
வெளியூரில் மோஹம் கொண்டு,
ஓஹோ மரத்தில் ஏறி,
உச்சாணி கொம்பில் அமர்ந்து,
வா வா என்று கூவி கொண்டது.!

கூவல் கேட்ட  இஷ்ட ஜனங்கள்,
பெட்டி படுக்கை கெட்டினார்கள்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று,
 
ஓடி வந்து  ஒட்டி கொண்டார்கள்.

வளத்த கிளியும் மனம் மகிழ்ந்து,
சொந்தங்களை அணைத்து கொண்டது.

 பிள்ளை பாசம் கொண்ட சொந்தம்
வங்கியில் பணம் போட்டு கொஞ்சம்,
கூப்பிட்ட குரலுக்கு உதவும் நெஞ்சம்,
தஞ்சம் புகுந்தவனுக்கு ஏது வஞ்சம்!
வீட்டு  வேலைக்கா  இங்கே  பஞ்சம்?

 
என்னுடன் தான் இருக்க வேண்டும்,
 தாய் நாடொன்றும் திரும்ப வேண்டாம்.

 சுத்தமான
காற்றும், பசுமையான ஊரும் ,
 வத்தாத ஆறுகளும் ,ஸ்படிகம் போல் தண்ணீரும் !
அழகழகா பூங்காவும் ,சுத்தமான வீதிகளும் பார்,!
ஒட்டுபெரை வீடுகளும்,பூத்து குலுங்கும் தோட்டங்களும்,

ஆறாய் ஒழுகுது, பார், பசுவின் பாலும் வெண்ணையும் இங்கே
 தரமான பழங்களும் தான் லாபமாக கெடக்கும் ,இங்கே.

எப்போதும் இருக்கும் அம்மா மின்சாரம் இந்நாட்டில்,
கரண்டு கட்டு ஒருபோதும் இல்லை அம்மா இவ்வீட்டில்,

அத்தனை அறைகளிலும் இருக்குதம்மா ,கம்ப்யூட்டர்
,
மனம் மகிழ பாக்கலாமே தமிழ் சீரியல் முழுக்க,முழுக்க.
தாய் நாட்டு  வார்த்தைகளும் படிக்கலாமே தவறாமல்.

போடோஷோப்பும் இருக்குதம்மா,சித்திரமும்   போடலாம்,,    
இனி என்ன வேண்டும் அம்மா உங்கள் பொழுது போவதற்கு,
யோகாப்யாசம் செய்து ,கொஞ்சம் ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் அம்மா.

சிக்கனமா வாழ்ந்து விட்டு காசு பணம் சேர்க்க வேண்டும்,
இந்நாட்டில் வசிப்பதற்க்கு, ஸ்வந்தம் வீடும் வாங்க வேண்டும்..

வேலைக்காரி தொல்லை ஒன்றும் இல்லவே இல்லை  இங்கே!       
நம் வீட்டு வேலையெல்லாம் நாமே தானே செய்யணம்.!.

தெருவுக்கு தெருவு, இங்கே, இஸ்திரி வண்டியும் இல்லை,  
மொத்தமாக இஸ்த்ரிஎல்லாம் நாமே தான் போடணம்.!                    

கார்  எடுத்து சென்று தான் மளிகை சமான் வாங்க வேண்டும்,
போனில் பேசி சொன்னால் ஒன்றும்  வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள்..

காய்கறி வண்டி ஒன்றும்  வீட்டு  வாசல் வருவதில்லை.
சூப்பர் மார்கட் போகவேண்டும் காய்கறி எல்லாம் வாங்குவதற்கு.

வேலைக்கு போகிறார்கள் ஆணும் பெண்ணும் இங்கே,
அவங்கள் ஓடும் ஓட்டம்  பார்க்கும்போது வேதனை தான் போங்க.

திங்கள் முதல் வெள்ளிவரை பேச நேரம் இல்லை,
தாமரை இலை தண்ணீர் போல் இருக்கும் அவர்கள்  தோற்றம்.

சனி  ஞாயர்  வாந்தால் தான் வீடு  சுத்தம்  ஆகும்  
குடும்பத்தினருடன் பேசி பழக இரண்டு நாள் மட்டுமே!.

குறை ஒன்றும்  இல்லைதான் வெளிநாட்டு வழக்கை,
நிறைவேதும் இல்லையே நிஜமாக பார்த்தால்.

வெளிநாட்டில் இருக்கும்போது தாய் நாட்டின்
நினைவு,
தாய்நாட்டில் இருக்கும்போது வெளிநாட்டு கனவு.

கனவும் நினைவும் சேர்ந்து  நம்மை ,ஆட்டி வைப்பதும் மனமே,
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று   ஓட  வைப்பதும்   மனமே!

ஜெயம்
19-6-2011

Monday, 13 June 2011

ராமுவின் துணிச்சல்

ராமுவின் துணிச்சல்


சூர  புலி ராமசந்திரன்  என்னுடைய தந்தை,
ராமு  என்று செல்லபெயரால்  அழைப்பாள் என் பாட்டி.
ஊரே நடுங்கும் எந்தன்  தந்தையின்  குரல் கேட்டால்,
நடுநிசியில் திருட வரும்  திருடனும் நடுங்குவான்.

வெத்தலை  பாக்கு போடும் பழக்கம் உண்டு என் தந்தைக்கு,
பாக்குடன் புகையிலை, சேர்த்து போடுவார் என் தந்தை.
ஓசியில்  வெத்தலை போட வரும்  நண்பர்களும்  உண்டு
வம்பு பேசி போகும்போது கையில் எடுத்தும் செல்வார்கள்.

பக்கத்து வீட்டு மாமா மூச்செறக்க வருவார்,
சட்டென்று தந்தையிடம் ஓடிவர சொல்வார்.

அவர் தோட்டத்தில் பார்த்தாராம் பச்சிலை பாம்பொன்றை,
உடனடியாக வந்து அதை சாகடிக்க வேண்டுமாம்.

பாம்படிக்கும் வீரனாச்சே என்னுடைய  தகப்பன்,
பாம்பை பிடிக்க விரைவார் கம்புடன் என் தகப்பன்.

கம்பெடுத்து  பாம்பின் தலையில் உன்னம் பார்த்து அடிப்பார்,
பாவம் அது கண் இருண்டு மயக்கம் போட்டு விழுமாம்.

பாம்பின் வாயை பிளந்து துணிச்சலாக விஷ பல்லை காட்டுவார்,
இன்னம் இரண்டு அடி அடித்து முழுக்க சாவடிப்பார்.

பாம்பை தூக்கி குச்சியாலே  மேலே வீசி எறிவார்,
தெருவில் போகும் அய்யர் தலையில் பாம்பும் போய் விழுமாம்,

பாம்பை பார்த்த அய்யரோ ,பயந்து நடுங்கினாராம்.
வேடிக்கை பார்த்த என் தந்தையோ பொட்டி சிரித்தாராம்.

வேண்டாமடா ராமு  உனக்கு இந்த விஷ பரீக்ஷை,
நாகதோஷம் வந்தால்,நமக்கு இல்லை ரக்ஷை.

பாம்பின் சாபம் போல்லாத்ததப்பா
குடும்பத்துக்கு  அது மிக சாபமப்பா.
ஜெயம் .
14-6-2011






.

ஹெல்மெட்

 ஆறாய் பெருகுதம்மா என் கண்ணுநீர்,
 தவறாகி விட்டதம்மா என் கூட்டண்ணி
  நம்பினேன் நண்பர்களின் பின்னணி ,
  எமாத்திவிட்டார்கள் மொத்தமாய்.

விடமாட்டேன்  நான் என் ராசாத்தி மகளை,
காபாத்த  வந்திடுவேன் நான் அவளை,
அஞ்சாமல் போராடுவேன்  சுப்ரீம் கோர்டினில்
வாதாடி  ஜெயிச்சூடுவேன்  இந்த கேசிநில்,.

விடமாட்டேன் தர்சமயம் கூட்டணியை,
விட்டால் ஒட்டிக்கும் இரட்டை இலை,
கழுகுபோல் வட்டமிடும் பச்சை இலை.
மறைந்திருந்து  தாக்கும் சூழ்நிலை.

என்னம்மா செய்வேன் என் கனிமொழியே?
உன் துன்பங்கள் அத்தனையும்  ஒழிய , சொல்லுவார் எவரும் இல்லையே ஒரு வழி,
கறுப்பு கண்ணாடிக்குள் துடிக்குது என் விழி.

தேவையா நமக்கு  இந்த சோதனை,
குடும்பத்துக்குள் இத்தனை ரோதனை,
அடுத்து நான் செய்வதும்  ஒரு சாதனை,
பொறுத்திருந்து பாருங்கள் அத்தனையும்.

நேராக சென்றிடுவேன் முதியோர் இல்லம்,
என் மனைவிகள்  இருவரும் தருவார்  ப்ரதி பலம்,
மக்களை பெத்த மனமே மத்தளம் கொட்டு,
உன் தந்தை கலைஞ்சருக்கோ இரட்டை குட்டு.

தாங்குமா தந்தையின்  இந்த சொட்டை தலை,
ஓங்கி குட்டும் உன் தாய்க்களின் கலை,
எங்கு படித்தார்களோ கறாத்தை கலை,
எனக்கு தெரியாமலே போட்ட வலை.

தாங்குவதற்கு  ஓர்  ஹெல்மெட் வேண்டுமே ,
மண்டை ஒடயாமல் பாதுகாக்க வேண்டுமே
தொண்ணூறு வயதிலும் இரட்டை மனைவியா?
அனுபவம் சொல்லுதே நான் ஒரு பாபியாய்

இந்த பாபிக்கும் உண்டு கடவுள் வாஸனை.
யாருக்கும்  தெரியாமல் கும்பிட்டேன் ஈசனை.
ஈசனே நீ எனக்கு திசை ஒன்று காட்டுவாய்.
திக்கற்று நிற்கும் மகளையும் கார்ப்பாய்

தூங்குவதற்கு எனக்கொரு இடம் வேண்டும்,
எங்கே நிம்மதி,எங்கே நிம்மதி,அங்கே எனக்கொரு இடம் வேண்டும்.
ஜெயம்
13-6-2011

பாபாவின் திருவிளையாடல்.

பாபா  குரு ராம்தேவ்  தலைநகரம் வந்தாராம்,
கருப்பு பணத்தை மீட்க்க  வழி ஒன்று கண்டாராம்.
ராம லீலா மைதானத்தில்,திட்டமிட்டு வந்தாராம்,
சாகும் வரை உண்ணாவ்ருதம் சபதம் செய்து கொண்டாராம்.

ஏர்போர்ட்டில் பாபாவுக்கு,சிவப்பு கார்பெட் வரவேர்ப்பாம் ,
மந்த்ரிமார்  ஐந்துபேர்  அவர் திட்டத்தை கலைக்க சென்றார்களாம்.
இரண்டு மணி நேரம் பேசி தொண்டை தண்ணீர் வத்தித்தாம்
குருதேவ் ராம்தேவும் அசைந்து குடுக்கவில்லயாம்.

மக்களுடைய வசதிக்காக,பந்தல் ஒன்று போட்டாராம்,
குளிக்க,கழிக்க மக்களுக்கு வசதியும் செய்தாரம்.
குடிக்க தண்ணீன்,உண்ண கான்டீன்,பான்களும் போட்டாராம்.
சீடர்களும் பக்தியுடன் கை கூப்பி நின்றார்களாம்.

சனியன்று காலையில் யோகாப்யாசம் ஆனது,
அப்பவே தொடங்கியது ராம்தேவின் உண்ணாவ்ருதம்.

உண்ணாவ்ருதம் தேவையில்லை அரசாங்கம் சொல்லியது,
கருப்புப்பணம் மீட்பதற்கு கமிட்டியை போடுவோம்,
மீட்டிங்கிலே பேசி பேசி தீர்ப்பொன்று காணுவோம்.

அரசாங்கத்தின் குறுக்கு வழி எங்களுக்கும் தெரியும்,
அண்ணாவை திட்டம் இட்டு ,மடக்கியதும் தெரியும்.
எங்களிடம் செல்லாது  உங்கள் பித்தலாட்டம்,
கருப்பு பணம் திரும்பாமல் நங்கள் ஓயமாட்டோம்.

செய்வதறியாமல் அரசாங்கம் முழித்தது,
ராமதேவை கடத்த தீருமானம் கொண்டது.

பந்தலுக்குள் மக்களெல்லாம் தூங்கி  கொண்டிருந்தார்கள்,
பாதி ராத்திரி  போலீஸாரும் பூனையைப்போல் நுழைந்தார்கள்.
ராமதேவை தட்டி எழுப்பி கடத்தி செல்ல முயன்றார்கள்.
மக்களெல்லாம் முழித்து கொண்டு வளயம் போட்டார்கள்,

ராம்தேவோ கீழே குதித்து கூட்டத்துக்குள் மறைந்தார்.
போலீஸும் ராம்தேவை தப்பி தப்பி அலைந்தார்கள்.
பாபாவோ  பெண் வேஷம் போட்டு விட்டு      கூட்டத்தினுள்  ஒளிந்தார்,
பொலிஸாரை கொஞ்ச நேரம் திண்டாடவும் வைத்தார் .

போலீஸ் அவரை வலை வீசி கடத்தி சென்று விட்டது,
இனி டெல்லி பக்கம் வந்தாய் அனால்  கொலை நடக்கும் என்றது.
பூச்சாண்டி கட்டினால் நான் பயன்திடுவேனா
பத்து மடங்கு சக்தியுடன் படையெடுத்து வருவேனே.

மந்த்ரி என்ற பதவிக்கு ஏங்குவதும் ஏனோ? கொள்ளையடிப்பதற்கு தக்க  இடமும் இதுதானோ?
வெக்கமே இல்லாமல் வெள்ளை சட்டை போடுறேள்,
வக்கணையாய் சேத்தி வைப்பது                கருப்பு பணம் மட்டுமே,

அத்தனை மக்களும் ராம்தேவின்  பக்ஷம் தான்,
எமர்ஜென்சியை போல் நடத்தலாமா மக்களை?
பிரதமர்தான்  நிச்சயம்  பதில் சொல்ல வேண்டும்,
மறைந்திருந்து,பாபாவை தாக்கியதும் சரியா?
மக்களை லாத்தியால் அடித்ததும்  சரியா?
பெண்கள் என்றும் பாராமல் மிதித்ததும் சரியா?
உறங்கும் மக்களை விரட்டியதும் சரியா?
பிரதமராக நீர் இருந்தும் மக்கள் கதி இதுவா?

அமைதியாக நடத்தும் இந்த  சத்யாக்ரஹத்தில்,
பூந்து விளையாடினத்தின் ரகசியமும்  என்னவோ?
ராம்தேவ் சொல்வதிலும் நியாயமும் இருக்குதே!
கருப்பு பணம் அத்தனையும் மக்களின் உழைப்பே!

 கண் மும்பில் காணுதே ஒரு குருக்ஷேத்திர  யுத்தம் !
 யுத்தம் வராமல் தடுப்பதே  தான்  உசிதம்.

ராமதேவும் ஹசாரேயும் சொல்வதுபோல் செய்யுங்கள்,
பதவி விலகி கொடுத்து விட்டு  பாய் -  பாய் சொல்லுங்கள்.
எந்த அரசு வந்தாலும் நங்கள் விட மாட்டோம்,
கருப்பு பணத்தை மீட்க்காமல்  நாங்கள் அடங்க மாட்டோம்.
ஜெயம்.
6-6-2011

ஜெயில் வாஸம் அது சுக வாஸம்.

கலாநிதி மாறனே, தயாநிதி  மாறனே,
நிதி வந்த போது தடுமாறவில்லையே
பி எஸ் என் எல் ,புகாறில் தடுமாறுவதேன்?

டி எம் கே குடும்பத்திலே நானும் ஒருவன் தானே,
கருப்பு கண்ணாடியும் எனக்கு வழிகாட்டினாரே 
காற்றுள்ளபோதே தூற்றிகொள் " மாறனே நம்ம வீட்டு பிள்ளை  நீ ,காட்டிகுடுக்க மாட்டேன்   
சொன்னதை செய்தேன் கலைஞர் சொல்படி,
அக்ஷரம் ப்ரதி அநுசரித்தேன் என் மாமனை,
மாட்டிவிட்டானே படு பாவி  சிவசங்கரன்.

கனிமொழியே ,என்  ராசாத்தி   மகளே,
சிறையிலும்  உனக்கு ராஜோபசாரமாம்.,
கைதிகள்கெல்லாம் உன்னிடம் பஹுமானமாம்.
எத்தனை கொடுத்தாய்  நீ போபுலர் ஆக?
என்னிடம் சொல்லு நானும் தருகிறேன்.   

கூடிய சீக்ரமே  நான் அங்கே வருவேன்,
கோடி  கோடியாக விஷயங்கள் பேசுவோம்.

பாபா  ராம்தேவின் விண்ணப்பம் கேட்டியா
பாடு பட்டு ,நாம் கொள்ளயடிப்போமாம்,
ஏழை மக்களுக்கு அதை  தானம் செய்ய வேண்டுமாம்,

கோடி கோடியாக சுவிஸ்  வங்கியில் போட்டோம்,
அத்தனை பணத்துக்கும் கணக்கு காட்ட வேண்டுமாம்.
பட்டினியாக கிடப்பாராம்,அவருடன் மக்களும்,
கருப்பு பணம் எல்லாம் நாடு திரும்பும் வரை.

என்னவென்று  சொல்வது,பாபாவின் துணிச்சலை,
காவி வஸ்த்ரம் தரித்து,குடுக்கிறார்  ஹிம்சையை,

நிச்சயம் சொல்லுவேன் அத்தனை மந்தரியும்,
கம்பி எண்ண வருவார்கள் கூடிய சீக்ரமே.

கனிமொழியே  என் அருமை தங்கையே,
எனக்கும் ஓரிடம்  சிறப்பாக சொல்லிவை.

குறை ஒன்றும் இல்லையே புதிது ஒன்றும் அல்லவே.    
நம் குடும்பமே  ஸ்வாசிப்பதும்,ஜெயில் காற்று தானே.            .

தெரியுமா உனக்கு உன் அப்பாவின் வயதிந்று ,
தொண்ணூறை தாண்ட இரண்டு ஆண்டுகள் பாக்கி.
உன் அப்பாவின் ஆசை கடைசீ ஆசையாம், குடும்பத்தில்  எல்லோரும்  ஜெயில் பாக்க வேண்டுமாம்.

தயாலு அம்மாவையும்  ராசாத்தி அம்மாவையும்,
அனுப்பி வைப்பாராம்  அவர்  உனக்கு துணையாக.

செய்தி ஒன்று கேட்டாயா,சூடான செய்தி,
அம்மா வென்ற  காட்டானைக்கு மதம்  பொட்டி விட்டதாம்.
த்வம்சம்  பண்ண போகுதாம் தமிழ் நாடெல்லாம் .

மந்த்ரிமார் அனைவரும் வந்திடுவோம் சிறைக்குள்,
காட்டானையின் பயம் நமக்கேதும் இருக்காது.

குறை ஒன்றும் இல்லாமல்,நிறைவோடு வாழுவோம்,
வேளா வேளைக்கு சாப்பாடும் கிடைக்கும்.

மணி அடித்ததும் தட்டேந்தி  நிக்கலாம்
கப்போன்றில் டீயாம்,தட்டொன்றில் ப்ரெட்டாம்.

எளிமையான வாழ்க்கையிது, புனிதமான மனநிலையும்,
சொகுசான வாழ்க்கை எதுக்கு? வேண்டவே வேண்டாம்.


ஜெயம்

சமாதியாய் மாறிய சந்நிதி.


இதோ நம்ம  பூமி ,கோயில் நிறைந்த பூமி,
கோபுரமாம் கோபுரம் ,எங்க பாரு கோபுரம்.

என்னோடு வந்தார்கள் என் மகனும் குடும்பவும்,
வெளிநாட்டிலிருந்து வந்து தீர்த்தாடனம் செய்ய.

தமிழ்நாடு  முடிந்தப்பின்  கேரளாவும் போனோம்,
திருச்சூரில்   தோழி வீடு திருவம்பாடி சென்றோம்.

தேக்கின்காடு மைதானத்தில் சிவாலயம் ஒன்று,
வடக்குநாதன் என்ற  பேரில் பிரம்மாண்ட கோயில்.

பட்டையாக விபூதி இட்டு என் மகனும் வந்தான் ,
கூட்டத்துடன் கலந்து கோயிலுள்ளே நுழைந்தோம்.

சுத்தமான வேஷ்டியணிந்து கை கூப்பி நின்றான்,
பக்தியுடன்  கண்  மூடி ஜபம் எதோ செய்தான்.

சட்டென்று அவன் மனதில் எதோ  ஒன்று உதித்தது,
வேகமாக வந்து அவன் எங்களிடம் சொன்னான்.

இதோ பார்  இங்கே தான் ராமரின் சமாதி,
அந்தபக்கமோ  பக்த ஹனுமான் சமாதி.
அதோ பார் அதுதான் புள்ளையார் சமாதி,
பக்கத்திலே இருப்பதுதான் முருகன் சமாதி.

சிவ சிவ ,சிவ சிவ ,இதுதான் ஈசனின் சமாதி,
பின்பக்கம் போவோம் அங்கே பார்வதியின் சமாதி.

கண்ணை மூடி எல்லோரும் பிரார்த்தனை செய்தோம்,
சமாதியும் பார்த்தோம் நிம்மதியும் அடைந்தோம்.

இனி என்ன வேலை இங்கே வெளியே போகலாம்
சந்தன பிரசாதமும்  இலையில் வாங்கிகொண்டு.

வெளியே  வந்து நாங்கள்  கல்லில் அமர்ந்து  கொண்டோம்,
பொட்டி பொட்டி சிரித்தேன் குலுங்க குலுங்க சிரித்தேன்.

தட்டி கேட்டான் என் மகன் விஷயம் என்ன வென்று,
பொறுமை இல்லை அம்மா ஏனோ இந்த  சிரிப்பு.

சொல்லுவேண்டா  மகனே நீயும் சேர்ந்து சிரிப்பாய்,
உன்னுடைய பாஷை நீ அறிந்து கொண்டாய் அனால்.

ஸ்வாமிகள்  இருக்கும் இடம் சந்நிதியாம் மகனே,
சமாதி  அல்லவென்று  தெரிந்துகொள்  மகனே.

தெரிந்து கொண்டேன் அம்மா  இனி வாயை திறக்கமாட்டேன் ,
தப்பான  வார்த்தையால் , முந்திரிகொட்டை ஆட்டம்.

ஜெயம்
30-5-2011

விளையாட்டு சண்டை

        
என் பெரியப்பா வீட்டு திண்ணை, நீளமான திண்ணை,
நானும்  என் பங்கஜமும்  பாண்டியாடும் திண்ணை.

பாண்டியாடும்போது வரும் ஆஹா நர்வாசனை ,
முருங்கக்காய் சாம்பாரும்,இடிச்சக்கை தொரனும்.

யார் அதிகம் சேகரிப்பாள்,கல்சட்டி துண்டுகள்,
கோடு போட வேண்டுமே பாண்டி ஆடும் பொது.

அம்மாவுக்கு  தெரியாமல்  உடைப்பேன் ஒரு சட்டியை,
கோடுபோட்டு ஆடவெக்கும் மாக்கோல் கல்சட்டியை.

நாளை ஆட வரும்போது  மாகல்லுடன்  வருவேன்,
நீயும் நாளை வரும்போது மாகல்லுடன் வருவாய்.

சபதம்  செய்து ரெண்டுபேரும் ஆர்வத்துடன் பிரிந்தோம்.
மறுநாள் வீண்டும் சந்தித்தோம் ஆளுக்கு அஞ்சு  கல்லுடன்.

நீ  உன் கல் எடுக்கவேண்டும் முதல் கோடு போட,
முடியவே முடியாது இது எங்கள் வீட்டு திண்ணை.

ரெண்டுபேரும் சண்டை போட்டு முடியை இழுத்து கொண்டோம்,
என் மாக்கல் எல்லாம் எடுத்து சென்று கிணத்தில் போட்டு விட்டாள்.

செய்வதறியாமல் கிணத்தை  எட்டி எட்டி பார்த்தேன்,
வருத்தம் தாங்காமல் வாய் பொத்தி நின்றேன் .

பழி வாங்க நான் அவளை கோணங்கி காட்டினேன்,
ஜோராக வந்து  என்னை கடித்து விட்டு சென்றாள்.

அழுதுகொண்டே அம்மாவிடம்   கோளு சொல்ல போனேன்
அம்மாவோ காத்திருந்தாள் என்னை அடிப்பதற்காக.

ஆவி வந்த கல்சட்டியை உடைத்தது  யாரோ
ஓடி வந்து என்னிடம் நீ கோள் சொல்கிறாயா
வாடி அம்மா சீமாட்டி உனக்கு  பூசல் உண்டு
ஏண்டி அம்மா கல்சட்டியை உடைத்து விட்டு போனாய் .

நீலி ஆட்டம் போடுறாயா நல்லவளை  போல
கல்சட்டி இல்லாமல் கொழம்பு  வைப்பது எப்படி?

அப்பா வாந்தால் கொழம்பில்லாமல்  சமாளிப்பது  எப்படி ?
அப்பா கோபம் தெரிஞ்சிருந்தும் செய்கிறாயே  இப்படி.

அம்மா அவள் கடித்து விட்டாள் என் வயத்தை பாரு
வேணம் கட்டைக்கு வேணம் அது கடவுள் தந்த சிக்ஷை .

போரும் அம்மா போரும் உன் கல்சட்டி புராணம்,
என்னைவிட கல்ச்சட்டிதான் உனக்கு பிரதானம்.

மாக்கல்  அத்தனையும் , கிணத்தில் போன சங்கமம்,
உனக்கென்ன தெரியும் அம்மா என்னுடைய சங்கடம்.

போடி பொண்ணே நோசபுழுக்கே கோடி புண்யம் உண்டு
நல்ல புத்தி  தரணம் என்று சாமியை  வேண்டு .

ஜெயம்
30-5-2011

பச்சாதாபம்

              
எர்ணாகுளம் என்று  அழைக்கும் அழகான ஊரு,
வெள்ளைக்காரன்,குடியிருந்த சின்னம் சிறு நாடு..

சித்தூர்  ரோடில் எங்கள் ஒட்டுப்பெரை  வீடு,,
நான் பிறந்து வளந்து வந்த வெள்ளை மணல்   நாடு ,

.நான் படித்த பள்ளிக்கூடம்,மாமா வீட்டு பக்கம்,
மத்தியானம் பெல் அடித்தால்,மாமா வீடு போவேன்,

மாமியோ எனக்காக வாசலிலே நிப்பாள்,
ஆசையாக சாதம் பிசைந்து கையிலே குடுப்பாள்.


அஞ்சாம் வகுப்பில் படிக்கும்போது நடந்த இந்த சம்பவம்,
இப்போது நினைக்கும்போதும் வருதே எனக்கு சங்கடம்.

பாட புஸ்தகத்தில் வரும் குள்ளநரியின் சிறுகதை,
வால் இருக்கும் ஒரு படம்,வாலில்லாமல் ஒரு படம்.

கல்யாணியும் பார்வதியும் இரட்டை பிறவிகள்,
நீளமான முடியும் பின்னி இருவரும் வருவார்கள்.

திடீர்  என்று கல்யாணிக்கு காச்சல் ஜவரம் வந்தது,
அவள் வீட்டில் அவள் தலையை மொட்டை போட்டு விட்டார்கள்.

மொட்டைதலை கல்யாணியோ பள்ளிக்கூடம் வந்தாள்,
அவளை பாத்து நானும்  நமிட்டு சிரி சிரித்தேன்.

திடீர் என்று வந்தது எனக்கு குள்ளநரியின் ஞாபகம்.
வாலு போன குள்ளநரியும்  கல்யாணியும் ஒன்று.
வாலிருக்கும் குள்ளநரியும்  பார்வதியும் ஒன்று.

படத்தை காட்டி பக்கத்திலிருக்கும் சாரு விடம் சொன்னேன்,
சண்டைக்காரி சாருவோ அமைதியாக கேட்டாள்.


மத்தியானம் லஞ்சுக்காக பெல் அடித்துவிட்டது.
நானும் என் பாகுடன் மாமாவீடு சென்றேன்.


திரும்பி வந்து என் பெஞ்சில் அமைதியாக         அமர்தேன் ,
சித்தநேரம் கழித்து வந்தாள் டீச்சரும் ஒரு கம்புடன்.

யார் அந்த ஜெயலக்ஷ்மி ,உடனே வா என் பக்கம் ,
போச்சு போ சண்டைக்காரி சாருவின் திருவிளயாடளிது.
எப்படியும் சமாளிப்போம் பொய்யொன்று சொல்லி.

சொன்னாயா சாருவிடம் கல்யாணியை பத்தி?
இல்லவே இல்லை டீச்சர் ,சாரு தான் சொன்னாள்,
யாரிடவும் சொல்லாதே என்றும் என்னிடம் அவள் சொன்னாள்.
வாலு போன குள்ளநரி மொட்ட தலை கல்யாணியாம்,
வாலிருக்கும் குள்ளநரி முடியிருக்கும் பார்வதியாம்.

என் அப்பாவி முகத்தை பார்த்து நம்பிவிட்டாள் டீச்சறும்,
சாருதான் பொல்லாதவள்  என்று டீச்சர் நம்பினாள்.

சாப்பிட்டு , திரும்பி வந்தாள் சாரு மிக குஷியுடன்,
வெளியிலேயே ,நில் என்றாள்  சாருவிடம் டீச்சரும் .
நூத்தெட்டு ஹக்கி போடவேண்டும் என்றும் சொன்னாள்.
சாருவோ பாவம் ,அவள் விக்கி விக்கி அழுதாள்,

நூத்தெட்டு ஹக்கி போட்டு காலும் கையும் வலித்தது.
அபமானம் தாங்காமல் முகம் பொத்தி நின்றாள்.

செய்யாத   குற்றத்திற்கு சாரு பலியாகினாள் செஞ்ச தவறை நினைத்து நினைத்து,கூனி  குறுகி நின்றேன்.
ஜெயம்
2-6-2011

பரதனின் விஜயம்

அப்பதோ எனக்கு வயது ஒன்பது,
தெரியவே தெரியாது பயம் என்பது.

என் அப்பா வழக்கமாய்  போடுவார் குடத்தை,
கிணதினில் போடுவார் தண்ணீர் இழுக்க.
கயத்தை கெட்டி குடத்தை போடுவார்,
இடதாலும் வலதாலும் சேர்ந்து இழுப்பார்.

பரதன் என்ற பய்யன் உதவிக்கு வருவான்.
குடத்து தண்ணீரை தென்னைக்கு விடுவான்.
வருவான்  பரதன்  காலிகுடத்துடன்
போவான் திரும்பியும் நிறை குடத்துடன்.

போனார் என்னப்பா  வெத்தலை போட
பரதனும் போனான்  சிகரட் ஊத
இதுதான் தககம் என்று நான் பாத்தேன்,
உடனே குடத்தை கிணத்தினுள் போட்டேன்.

குடமோ பெரிசு ,நானோ  சிறுமி.,
கிணத்தினுள் குடமும் முங்கிவிட்டது
இழுத்தேன் இழுத்தேன் குடத்தை இழுத்தேன்,
பாதிதான் வந்தது,களைத்து போனேன்.

காலில் கயறோ சிக்கி கொண்டது,
எனக்கோ தெரியவில்லை அது.
விட்டேன் கயித்தை,கிணத்தினுள் விட்டேன்
வேகமாய் போனேன் தலை கீழாக .

என் கால்கள் மட்டும் சிக்கியது எங்கோ,
உடம்பும் கைகளும் தலைகீழாக.
பரதா என்று நான் கூச்சல் போட்டேன்,
என் அம்மாவும் குரல் கெட்டு ஓடோடி வந்தாள்
விஷயம்  தெரியாமல்  முழித்து நின்றாள்.

பரதன்  வந்தான் தூக்கினான் என்னை
ஆபத்திலிருந்து  காபத்தினான் உடனே
சீறி எழுந்து  வந்தாளே என் அம்மா ,
கோபத்துடன்  வந்தாளே அடிக்க.

அடிக்க வேண்டாம்  தண்டனை குடுக்க,.
சொல்லுங்கள்  அவளிடம்  சத்தியம் அடிக்க
நூத்தெட்டு தோப்பிகரணம் போடுவேன்,
கிணத்து பக்கமே திரும்பவும் மாட்டேன்.

அம்மாவுக்காக  சொன்னேன் பொய்யை
ஹுக்கியும் நூத்தெட்டு போட்டாச்சென்று .

நானா போடுவேன் நூற்றெட்டு  ஹுக்கி,
அம்மாவை எமாத்திவிட்டேன் நான் சுட்டி. .

பரதன் வார்த்தைக்கு  மதிப்பு  கொடுத்தாள்
தண்டனை தராமல் விட்டு விட்டாள்.
நான் தான்  பயன்தான்குள்ளி அல்லவே ,
பயம் என்பது அறியாதத ஒன்பது.
        
                   ஜெயம்
                   1-6-2011

சொறி நாய்

பக்கத்து காம்பௌண்டில்  சொறி  நாய் ஒன்று வந்தது,
மோப்பம் பிடித்து  குழி ஒன்று தோண்டியது.


ஜநெல்  வழியாக  நான் வேடிக்கை    பார்த்தேன்         
நாய்  ஒரு  நிறைமாச தாய் என்றறிந்தேன் .

வாடிய முகத்துடன் குழியில் படுத்தது,
பத்தே நிமிஷத்தில் குஞ் எட்டு போட்டது.

குஞ்சுகள்  எட்டும் மாம்ஸ பிண்டங்கள்,
கண் திறக்காமலே பால் ஊட்டி கொண்டது.

தாயோ பெருமையுடன்  கால்களை நீட்டியது,
ஒரு தாயின் அன்புடன் பாலை ஊட்டியது.

சிறுநேரம் கழித்து தாய் வெளியே சென்றது,
குஞ்சுகள் அனைத்தும் தூக்கம் கொண்டதும்.

ஒருநாள் நாய்குட்டி ஒன்று தன்னிச்சையாக
கால் ஊரி  வந்தது   தன்னம் தனியாக
குறும்புடன் சென்றது, சாக்கடைக்குள் விழுந்தது,
விழுந்ததோ விழுந்தது,தலை கீழாய் விழுந்தது.
பாவம் அது வெளியே வர தவித்தது.,

பின் கால் இரண்டையும்  ஆட்டிக்கொண்டே இருந்தது. 
பாவம் அதை காபாத்த யாருமே இல்லையா?
இரை தேடி போன தாயும் வரவில்லையே என் ?
அய்யோ பாவம் என்று நான் காபத்த போனேன்,
மெதுவா எடுத்து அதை என்  மாறுடன் அணைத்தேன்.
விறைத்தது  அதின்  உடல் குளிர் தாங்க மாட்டாமல் ,
கிடத்தினேன்  குழியில்,அதின் கூட பிறந்தவர்களுடன்.

சந்தோஷத்துடன் நான் வெளிப்பக்கம்  வந்தேன்,
செய்தேனே  நான் இன்று புண்ய கார்யம் ஒன்று.
,
வேகமாய்  நான்  வருவதை கண்டதும்
தாய்  நாய் என்னிடம்  சந்தேகம்  கொண்டது.

கோபத்துடன் என் மேல்  சீறி  பாய்ந்தது.
பல்லை காட்டி என்னை  கடிக்கவும் வந்தது       
அதுவரை  வேடிக்கை பார்த்த இருவரும்
ஓடி விட்டார்கள் என் பேரனும் பேத்தியும்,

என்னை காப்பாத்த யாருமே இல்லையா?  அகபெட்டு  கொண்டேனே  நான் ஒரு  மூலையில்.
நிச்சயம்  நாய் கடி உண்டெனக்கு இன்று
சாமியை கும்பிட்டேன் மானசீகமாக.

நாயுமோ என்னை  விட்ட பாடில்லையே
கொழந்தைகளை  விட  நான் என்ன முக்யமோ ?
கல்லோன்றும் இல்லையே , கம்புகளும் இல்லையே
நாயை விரட்ட  எதுவுமே இல்லையே!
.
நான் என்ன செய்வேன்,செய்வதறியாமல், ,
தலையை  சொறிந்தேன் அட்டஹாசமாக.
,
அப்போது   சிக்கியது  சீப்போன்று கையில், ,
,வீசினேன்  நாயின்மேல் ஆங்காரம் தீர.

சீப்பை கண்டதும்  நாயும்  மிரண்டது,
குழந்தைகள்  ஞாபகம் உடனே வந்தது.

சீப்பாக வந்தார் கடவுள் என்னை காக்க
நாயும் போச்சு தன் செல்வங்களை  பாக்க.
ஜெயம்
29-5-2011

.

பூச்சி.

புக்கொன்று எடுத்தேன் ,கதவை தாழிட்டேன்,
டோயலேட்டில் அமர்ந்தேன்,புக்கை  திறந்தேன்.

பூச்சி ஒன்று வந்தது,வளயம் வந்தது,
என் கண் மும்பில் ,வந்து  விளையாட்டு காட்டித்து.
பூச்சி தான் என்று பொறுமையில் அமர்தேன்,
திரும்பவும் என் விழி புஸ்தகத்தில் சென்றது

பூச்சியோ விடுமா துணைவியுடன் வந்தது,
இரண்டுமாய் சேர்ந்து தொந்தரவு செய்தது.

பூச்சிக்கு கொண்டாட்டம் ,எனக்கோ திண்டாட்டம்.
கை வீசி பிடித்தேன்,தப்பி சென்று விட்டது.

நிச்சயம் நான் உன்னை சும்மா விட மாட்டேன்,
இன்று  நீ உயிருடன் தப்பி செல்ல மாட்டாய் .

ரெண்டில் ஒன்று பார்ப்போம்,நீயா ,நானா  ,
வேண்டாம் வீண் வம்பு சாவாய் நிச்சயமா ..

பூச்சியும் வந்தது, படை எடுத்து வந்தது ,
புஸ்தகம் படிப்பயா,உனக்கு வேறே இடம் இல்லையா?

பூச்சியோ சொல்லித்து இது எங்கள் இருப்பிடம்,
யார்  இங்கே வந்தாலும் ஆக்ரமம் ,நிச்சயம்.

சண்டை பெருத்தது ,புஸ்தகம் நனைந்தது,
வந்த கார்யமோ ,நிறைவேறவில்லை.

எடுத்தேன் ஓட்டம் பூச்சியை பயந்து,
அழாத குறையா ,கதவை திறந்து.
ஜெயம்
28-5-2011



குப்பை ரூம் (second part )

தந்தையின் கதை  கேட்டு நேசித்தேன் குப்பையை,
பூஜித்தேன்  என் தந்தையை  ஓர் .ஆதர்சவாதியாய் .
தப்பாக எடை போட்டேன் ஓர் சோம்பேறி மனிதனாய்,
தந்தையே உன்  மனம் நொந்துதா என் சொல்லினால்?
குப்பையில் கடந்த நீ , எப்படித்தான்  வளர்ந்தாய்?
உன்னை தன் குழந்தையாய் யார் எடுத்து ஊட்டினாள்?
உன் ஸ்வந்தம் தாயும் தகப்பனும் எவரோ ?
கல் நெஞ்சம் கொண்ட அந்த தாயும் எவளோ?    
குப்பையை நோக்கி  உன்னை  எறிந்ததும் ஏனோ ?
அய்யோ  தந்தையே உனக்கு எத்தனை துயரம் ,
உன் தாரமும்  எப்பவோ போய்விட்டாள்  உயரம்.
தந்தையே நீ வாழ்ந்தாய்  உன் மகளுக்காக மட்டும்,
மறுமணம்  செய்யாமல் ,செய்தாயே தியாகம். 
தந்தையே  உன்னை நான் கைவிடமாட்டேன் ,
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன்.
வேண்டாம் எனக்கு திருமண வாழ்க்கை,
தந்தையை காப்பது தான் என் கொள்கை.

வாழ்நாள் எல்லாம் நேசிப்பேன்,என் தந்தையை,
பாசத்தை கொட்டும் என் தந்தையார் குப்பனை.
ஏன் தந்தையின் சரிதம்  ஓர் குப்பை கதையல்ல ,
அதொரு  குடிமகனின்  மகத்தான  சரித்ரம்.
ஜெயம்
27-5-2011

குப்பை ரூம்.

 குப்பை ரூம் என்பதின் விளக்கம் என்னம்மா?
சொல்லு நீ  என்னிடம் என் குட்டி கண்ணம்மா.

சொல்லுவேன் தந்தையே ,உன்னிடம் சொல்லுவேன்,
அது ஒரு பெரிய சிதம்பர ரஹசியம்.


என்னதான் சொல்கிறாய் மகளே அது ரகசியமா?
சொல்லு நீ என்னிடம் அதை அவசியமா .

சொல்கிறேன் தந்தையே பொறுமையாய் கேளுங்கள்,
கோபபடாமல் கவனமாய் கேளுங்கள்.

சென்னையில் அதின் பெயர்  கார்-கராஜ் ,
சிட்னியில் அதின் பெயர் வொர்க்ஷாப்.
நம் வீட்டில்  அது ரெண்டும்  இல்லையே!
குப்பையோ  குப்பை அது பொய்யும்  அல்லவே!

சரிதான், ஒரு வழி  நீ சொல் கண்ணம்மா,
என் தலை சுத்துது  புத்திசாலி  கண்ணம்மா.

அப்பா  நான்  சொல்வதை கவனமாக  கேள் ,
தப்பா எடுக்காமல்  நான் சொல்வதை  செய்.

செய்கிறேன் கண்ணம்மா ,விஷயத்தை சொல் ,
குப்பை ஒழிப்பதை தவிர எதையும் செய்கிறேன்.

என்கூட வா அப்பா குப்பையை எறியலாம்
நானும் நீயுமா சுத்தம்  செய்யலாம்.

அய்யோ வேண்டவே  வேண்டாம் இது
ரொம்ப கஷ்டம்,
என்னால் முடியாது  என் பணமெல்லாம் நஷ்டம்.

வேண்டாம் தந்தையே வீண் பிடிவாதம்,
தேளும் பாம்பும் சிலந்தியும் இருக்குமிடம்,

குப்பையை ஏறிந்து,சுத்தமாய் பெருக்கி,
காறை குளுப்பாட்டி,அகர்பத்தி  கொளுத்தி
குப்பை ரூம் என்பதை  ,கராஜ் என்று மாற்றி
நம்  காறை   அழகாய்  கராஜில் வைப்போம் .

நீ போடி பெண்ணே உன்னை யார் கேட்டாள்,
வேண்டவே வேண்டாம் ,உன் உபதேசம்.
நம் வீட்டு குப்பை  நம்முடன்  இருக்கட்டும்,
குப்பையில் தான் மகாலக்ஷ்மி இருப்பாள்...

குப்பையோ  குப்பை என்றெல்லாம் சொல்கிறாய் ,
நீ என் மனதை  மாற்ற பார்க்கிறாய்,
யார் வந்து சொன்னாலும் நான் மாற மாட்டேன்,
என் என்று கெட்டால் நான் சொல்ல வேண்டுமா?
என் பெற்ற தாய் என்னை எறிந்ததும் குப்பையில்.

போதுமா என் கதை  கேட்டியா,கண்ணம்மா
உன் தந்தையின் பெயரும் குப்பன் தானம்மா.

ஜெயம்
26-5-2011

பச்சை இலையின் பரிஹாசம்

 வந்தாளே ஆட்சிக்கு செக்க செவேன்னு ஒருவள்,
கருப்பு கண்ணாடியின் அட்டஹாசம் தாங்காமல்,
இத்தாலியை  சேர்ந்த சதுர்முகி ஒருவள்,
சொன்னாளே இவளுக்கு வெற்ற்யின் வாழ்த்துக்கள்..

ஆங்காரம்  கொண்ட கருப்பு  கண்ணாடியோ ,
அழுத முகத்துடன்  தலை நகர் சென்றார்.
பாவம்  தன் மகளை சிறையில் கண்டார்,
துக்கம்  தாங்காமல் உறைந்து நின்றார்.

காங்கிரஸ்  ஆட்சியோ கொண்டாடினார்கள்,
ஆட்சியின் இரண்டாவது பிறந்த நாள் டின்னர் .
அழைப்பு  வந்தது  டி. எம். கே  கட்சிக்கும் ,
சி! யார் போவார்கள்  இந்த டின்னர் கசக்கும் .

எனக்கு யாரும் நண்பர்கள் இல்லை,
ஆபத்து நேரத்தில்  கப்பாத்தவில்லை,
யாருக்கு வேணம் உங்கள் முதலை கண்ணீர்
போங்கடா போங்க அம்மாவின் கூஜா தண்ணீர்.

நீங்களும் வருவீர் என் மகளுக்கு துணையாய்
ஒவோருத்தராக  வரிசை வரிசையாய்.
எத்தனை ஆண்டுகள் சிறை வாஸம் உண்டோ?
அத்தனை  பேருக்கும் அனுபவம் உண்டு.

 பச்சை இலை கேலியாய்  இன்று சிரித்தது,
பழுத்த இலை விழுந்ததும் ,பரிகாசம் கொண்டது,
சிரிப்பாய் சிரிப்பாய் இன்று நீ சிரிப்பாய் ,
நாளைக்கு  உன்கதியும் இதுதான் வழியாய் .

எக்கேடும் கெட்டு  போங்கடா ,ஒரு வசம்,
வேண்டாம்  எனக்கு உங்கள் சஹாவாசம்,
போதுமடா சாமி போதுமே போதும் ,
இனி எனக்கு  க்ரஹ  வாஸம் போதும்.

ஜெயம் 25-5-2011

மோக்ஷம்




"'நான் " என்ற   அஹந்தை நம்மிடம்  இருந்தால
மோக்ஷம்  என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.

எத்தனை பிறவி ,எத்தனை  பிறவி ,பிஞ்சாகவும் பழமாகவும் ,
எத்தனை ஜன்மம்  எத்தனை ஜன்மம் எடுத்தால் நீ  தருவாய் மோக்ஷம்
 எப்படி  வாழ்ந்தால்  தருவாய் மோக்ஷம்,
கடுவுளே சொல் குறைந்த பக்ஷம்.

நிச்சயம்  உண்டு   உனக்கு  மோக்ஷம்  ,
கொஞ்சம்   கொஞ்சமாய்  உன்  அஹந்தையை  துறந்து ,
நீ   ஒரு   ஞானியாய்  பழமாய்  வாழ்க்கையில்  கலந்து,
அத்தனை  பேருக்கும்   நன்மையை   செய்து  எளிமையாய்  வாழ்ந்து ,
உண்மையை  பேசி,கடவுளை  நம்பி  அஹிம்சையுடன் பகிர்ந்து ,
இரவும்  பகலும் , கடவுளை நினைந்து
ஏங்கி உருகி பிரார்த்தனை  செய்து
மனசா வச்சா, கர்மணா,ஒரு பிராணிக்கும் த்ரோஹம் செய்யலால் ,சதா உன்னை தியாகம் செய்தாய் அனால்  கிடைக்கும் மோக்ஷம் ,என்கிறார் இறைவன்.
அனால் அது , உன் கர்மத்தை    பொறுத்தது. ஏதாவது ஒரு பிறவியில் நீ ஒரு  மகானாய் பிறந்து,தன்னிலம்  இல்லாமல் ,    பிறர்க்காக உழைத்து ,சரீரம் "நான்"   அல்ல   "நான் " என்றது  ஆத்மாதான்,இந்த உண்மையை ,நீ அறிவாய் அனால்              அடையுவாய் மோக்ஷம், உடனே தருவேன்.


அஹந்தையை துறப்பது முடியுமா நம்மால்?
இந்த சம்சார ஸாகரத்தில் முழுகிய நம்மால்,
நான் என்ற நினைப்பு அனுதினம் வந்து ,
ஆயிரம் தடவை நம் புகழ் பாடி
நான் அதை  செய்தேன்  நான் இதை செய்தேன்,பாராட்டு பெற்றேன் .

நம் புகழ் நாமே பாராட்டி  பேசுவோம்,
பிறர் அதை கெட்டு அசை போட வேண்டும்,
நீ என்ன செய்வாய்  அது உன் ச்வயநிலம் .
"நான்" என்ற அஹன்தையின்  தனி நிறம்.

வாரம் ஒரு முறை இருந்து பார் மௌனம்,
அப்போது தெரியும்  மௌனத்தின் தனி  பலம் ,
மௌனம் காப்பது நல்ல உடல் பயிற்சி ,
"சும்மா இரு என்பது ரமணரின் பயிற்சி ,
ரமணரின் வார்த்தை உபதேச ஸாரம்,
எல்லா யுகத்திலும் நிலைத்த ஸாரம்.
ஜெயம்
24-5-2011

ஒசாமாவின் பயணம்

ஒசாமாவின் பயணம்
 



அய்யோ என் அருமை ஒசாமா ,                  
ஒபமாவின் அம்புலி மாமா,
நீ இன்னம் இறக்க வில்லை ஒசாமா,
அதெல்லாம் வெறும் டிராமா.

உன்  பொணம்  கடலில் தாழ்த்த வில்லை ,
வெறும் கல் மட்டும் தான் கடலின் விலை.
சாக விடுவாரா உன்னை ஒபாமா?
கேள்வி மேல் கேள்வி கேக்காமல் ஒசாமா?

நீ உயிருடன் தான் இருப்பாய் உலகில்,
கம்பீரமாய்  ஒரு மூலையில்.
ஒபமாவின்  பாதுகாப்பான சிறையில்,
நீ சிந்தித்து இருப்பாய் பகையில்.

எப்படி தப்பிக்கலாம் என்ற சிந்தையில் ,
நீ தூங்காமல்  விழித்து இருப்பாய் அறையில்.
உன்  நினிவில் வருவார் உன் குடும்பத்தினர்,
உன்னை காப்பாத்த உண்டா ஒரு துணைவியார்?

இல்லவே இல்லை உலகம் அப்படித்தான்,
சம்பத்து வேளையில் துணை  இருப்பாள்
ஆபத்து  வேளையில்  விலகி     இருப்பாள்.
என் அருமை ஒசாமா வாழ்க்கை அப்படித்தான்.

ஜெயம் 

24-5-2011

Sunday, 12 June 2011

ஜனனி



ஜனனீ ,ஜனனீ  ஜகமே ஜனனீ .
மனிதனின்  உதயம்  ஜனனியின்  உதரம்,
மனிதனின் பிறவி  பூமியின்  உபரி,
மனிதனின் நிறைவு அவன்  சொந்த  தாய்.
மனிதனின் தெய்வம்  அவன் கண்ட தாய்.
மனிதனின் தாய் கண் கண்ட தெய்வம்.
பிறந்தான், வளந்தான்,படித்தான் ,உயர்ந்தான்,
அவனுக்கென்று ஒரு சிகரத்தில் அமர்ந்தான்.
அவனுடன் வாழ வந்தாள் ஒருவள்,
இருவருக்கும் பிறந்தார் இருவர் .

காலமே காலமே ,ஓடோடி போனாய்,
அவன் தாய் நீயும் முத்தாட்டி ஆனாய் .
ஐயோ பாவமே நீ என்ன செய்வாய் ,
உன்னால் இப்போ நடக்கவும் இயலாது .

உன்னை பார்ப்பதே இல்லையே உன் மகன்,
தாய் தினத்தன்றும் வரவில்லை யாரும்.
ஏங்கினாய் ஏங்கினாய் ஒரு தரம் பார்க்க,
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
முதியோர் இல்லத்தில் உன்னைப்போல் அனைவர்
பழைய  நினைவில்  வாழ்வார்கள்  அல்லவா?

முதியோர் இல்லத்தில் உன் மூச்சு நின்றதும்
உன் பக்கத்து கட்டில் முத்தாட்டி வருவாள்,
உன்னை பொத்தி வாக்கரிசி போடுவாள்,
உன்னை எடுத்து ஊர்வலம் செல்வார்.
ராம் நாம்  சத்தியமே  ,ராம் நாம் சத்தியமே . .

ஒரு தந்தையின் கவலை


என் அருமை பெண்ணே ,வாடாத கனியே,
நீ அந்த மலர் வாடா மல்லி தானே ,
எதிர் நீச்சல் போட்டு வருவாய் நீ முன்னே ,
லஞ்சம் என்ற கடலில் முழுகினாலும் கூட .

நீ மட்டும் தானா, சிறையில் அடைந்தாய்?
மந்த்ரிமார்  அனைவரும் வருவார்கள் துணையாய்,
எத்தனை சிறைகள் ,எத்தனை அறைகள், எத்தனை பிழைகள்,
அம்மம்மா  கூட்டம் தாங்குமா அறைகள்?

பத்தாகுறைக்கு கல்மாதி வருவார்,
சிறையின் அறைகள் நிறைய  பணிவார்.
கூட்டம் கூட்டமாய்  வருவார்கள் மந்த்ரிமார்
தனக்கென்று ஒரு அறை சிறப்பாக பணிவார்,
கல்மாதி அதில் சிறப்பாக வாழ்வார்.

புதிய தலைமுறை வரும் நம் ஆட்சிக்கு
லஞ்சம் என்ற வார்த்தைக்கு  இடம் தராத  கட்சியாய்,
நம் பாரதம் வளரட்டும் ஒரு சத்யா லோகமாய் ,
ஜெய்  ஜெய் பாரத் மாதாகி ஜெய் ,ஜெய் ஜெய் அண்ணா ஹசாறேகி  ஜெய்.
ஜெயம் .
21-5-2011

கனிமொழி .கனிமொழி.....

கனிமொழி  .கனிமொழி , கண்ணீர்வழி ,
பண  கிழி  பணகிழி  ராஜா  வழி .
உன்  கதி  உன்கதி   அதோ  கதி  ,
உன்  விதி  எண்ணி  கதி  கலங்கும்  கருணாநிதி .

முதல்  நாள்  சிறையில்  எப்படி  அம்மா ?
உன்  தந்தை  தூங்காமல்  விழித்தேன்  அம்மா .
என்  அருமை  கனிமொழியே   எப்படி  அம்மா ,
யாவரையும்  பிரிந்து  வாழ்வை  அம்மா .

எனக்காக  நீ  படும்  சிறை  வாசம் ,
கடவுளே  என்னை  சேர்ப்பாய் உன்  வசம் ,
எப்படியும்  நீ  வருவாய்  கிரஹா பிரவேசம்    ,
இது  நிச்சயம் ,நீ  வருவாய்  எங்கள்  வசம் .

தைரியமாய்  இரு  கண்ணே   என்  கனிமொழியே ,
உன்னை   பிடித்த   தசை  சனி  ஒழியே ,
கவலை  இல்லாமல்  தூங்கு  என்கண்ணே ,
கொசு  தொல்லை  சிறையில்  இருக்க  கண்ணே ?

 ஜெயம்
21-5-2011