Saturday, 14 April 2012

ஜலக் ஜலக் பாயல் பஜே


 ஜலக்.ஜலக்.பாயல் பாஜே,எங்கிருந்து வருது இந்த சலங்கை சத்தம்?
 என் அம்மாவின் திரு முகம் பார்க்க நான் போடும் கொலுசு  சத்தம்


குட்டியும் கட்டையும் குளிர் அறியாது என்பது உண்மையா?
குட்டி தன் கால்களால் தொட்டிலில் அடிப்பதில் தெரியுமே!

காலையில் எழுந்ததும் கால் அடிப்பது என்னுடைய மந்திரம்,
அம்மாவை என்னருகில்,வரவழைக்கும் என்னுடைய தந்திரம்.

குளிராம் குளிரு,என் கால்களில் சாக்ஸ் போடவேண்டுமாம்,
பாழாய் போன குளிர் என்னை என்னதான் பண்ணிவிடுமாம்?

குல்லாவும்  மொஜாவும் போட்டாத்தான் பாஷணா?
போட விடமாட்டேன் பார் ஏன் அம்மாவை சுலபமா.

ப்ரீ ஆக விட்டாத்தான் என்னவாம் இந்த அம்மாக்கு,
வீட்டில் தான்  எப்பவும் ஏசியும் ஹீட்டறும் ஓடுதே!

குல்லாவை போட்டால்
நான் கைகளால் பிடிங்கிடுவேன்
ஒரு மோஜா போட்டதும் மறு மோஜா தெறிச்சிடும் காற்றிலே.

போட்டத்தையே போட்டு அம்மாவும்  களைத்திடுவாள்
இதுதாண்டா சாக்கு  என்று கட்டை விரலை சப்புவேன்.

கட்டை விரல் திடீர் என்று வாயில் இருந்து நழுவி விடும்,
பொத்தென்று கைகால் விழ,பேந்த பேந்த முழித்திடுவேன்,

ட்ரை ட்ரை ட்ரை எகைன்,அம்மா சொல்லி கேட்டிருக்கேன்,
வீண்டும் கால்களை தூக்கிவிட்டு  கட்ட விரலை பிடித்திடுவேன்.

பிடித்த விரலை விடாமல்  நான் பவிழ வாயில் நுழைத்திடுவேன்.
சுவாரஸ்யமாக சப்பும்போது குடும்பமே என்னருகில் கூடிவிடும்.

கிளிக் ,கிளிக் கட்டை விரலை சப்பும் போஸ் காமறாவில் பதிஞ்சாச்சு,    
இனி ஈமைலாக இந்த போஸில் நான் உலகம் சுற்றும் வாலிபையோ?

அய்யோ அம்மா வெட்கக்கேடு அனுப்ப வேண்டாம் யாருக்குமே,,
பெரியவள் ஆனால் அதை பார்த்து என் மானமெல்லாம்  போய்விடுமே!

போடாதே என் போட்டோவை பெயஸ் புக் என்றும் டைம் பாஸில்,
வம்பை தவிர ஒன்றுமே இல்லையே கண்டறாவி  இந்த பெயஸ் புக்கில்.

 போடி போ பைத்தியக்காரி,பத்தாம்பசலியைப் போல் பேசாதே ,
பள்ளிக்கு  போகும் பாப்பா கூட டச் ஸ்க்ரீன் கேக்கும் காலமிது.

கால சக்ரம்  மாறும் போது நடப்பதெல்லாம் ஓர் அதிசயமாம்.
தேசம் போல வேஷம் போட்டால் தேடி வருவது அத்ரிஷடமாம்

அம்மா தாயே விட்டு விடு என்னை என் மனம் போகும் போக்கிலே,
நான் விரும்பும் வாழ்க்கை எல்லாம் என் எள்ளுபாட்டியின் ஈறாவிலே.

மாட்டை  கெட்டி,பால் கறந்து  ஒரு கிராமதில்த்தான் வாழுவேன் நான்,
பச்சை மரமும்,பிச்சை கொடியும் கொஞ்சும் கிளியும் இருக்குமிடம்.

மாங்காய்,தேங்காய்,பலாக்காய் தொங்கும் இடமே எனக்கு சொர்க்கம்,தான்,
பாத்தி போட்டு கீரை வெதச்சு ,காய்கறி தோட்டம் போட்டுடுவேன் நான்.

வேண்டாம் கண்ணே வீண் பிடிவாதம் தோட்ட கனவை மறந்துவிடு,
தோட்டம் போட்டு கொட்டை கெட்டும் மன கோட்டை சிதைந்துவிடும்.

மாட்டேன் தாயே விடமாட்டேன் நான் பசுமை நிறைந்த கிராமத்தை,
கூடிய சீக்ரம் தொடங்கிடுவேன் நான் புத்தம் புதிய பழமுதிர் சோலை!!!

                          சுபம்                                                    ஜெயம் .
                          --------
                                                                                         15-4-2012.

Tuesday, 10 April 2012

சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.

                 சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.
                   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                            

ஆராரோ ஆரிராரோ ஆரடிச்சாளோ என் சித்திர பைங்கிளியை,
யாருமே  அடிக்காமல் அழுவதேனோ என்னுயிர் கின்கிணியே.

அடிச்சாத்தான்  அழவேண்டும் என்று யார் அம்மா சொன்னது?
அழுத பிள்ளை தான் தக்கும் என்று நீ தானே சொல்லுவாய்.

அழுத பிள்ளைக்குத் தான் பால் என்று அடிக்கடி சொல்வதும் நீயே,
அறிந்திருந்தும்  வீணாக  கவலை படுவதில்அர்த்தமேயில்லையே.

அழுவேன்  நான் ஜோராக  எனக்கு  பசி எடுத்தால் மட்டுமே,
அழும்போது மூச்சு தெணறி  எனக்கு காக்காய்  ஜீவன் போய் விடுமே.

என் அலறலை கேடடு என் அருமை தாய்   கொழம்பிப்  போய் நிற்பாளே ,
கரைப் வாட்டர் பாட்டிலுடன் என் கொள்ளுப்பாட்டியும்  ஓடி வருவாளே.

பாட்டி என்னை தன் மடியில் நேசுக்கி அமர்த்தி பாலாடயால்  போட்டுவாள்,
கரைப் வாட்டரின்  சுவையை ரசித்து சப்பு கொட்டி கொள்ளுவேன் நான்.

குளுப்பாட்டும் போது நான் பார்ப்பது என் தாயின் முகம் மட்டுமே ,
என் தாயின் அழகை  ரசிப்பதிலும் இருக்குதே  ஒரு தனி சுகம்.

என் தாயின் முகத்தை நான் கண் கொட்டாமல் பார்ப்பேனே,
என் தாயைப் போலவே  நானும் ஒரு அழகி தானோ என்னவோ.

 என் உடம்பெல்லாம்  எண்ணை தேய்த்து  மசாஜும் பண்ணுவாள்,
தோசையை திருப்புவது போல் என்னை திருப்பி திருப்பி போடுவாள்.

இதெல்லாம் இப்போ எனக்கு ஒரு புத்தம் புதிய அனுபவம் அல்லவா,
நான் பெரியவள் ஆனதும்  என்னை ஜிம்முக்கு அனுப்புவாய் இல்லையா?

என் முகத்தில் மட்டும் சோப்பு தேய்த்து கெடுக்காதே என் ரசனையை.
என் முகத்தை விட்டு,உடம்பெல்லாம் போடுவாய் சோப்பின் வாசனையை,

பஞ்சு டவலால் தொடைத்து என்னை பஞ்சு மெத்தையில் போடுவாள்,தாய்,
 குளித்த குசியுடன் தாயை பார்த்து போக்கவாயால் சிருப்பேனே ஆவலாய்.

ஜோஹன்சன் பவுடர் அப்பி என்னை மணக்க மணக்க செய்வாயே அம்மா,
ஆஹா!  கைகாலுகளை அடித்து விளையாடும் என்னை கொஞ்சம் பாரம்மா!

கண்ணில் மை இடுவது மட்டும் எனக்கு பிடிக்காத விஷயம்,
இரு கைகளாலும் தட்டி கெட்டுவேனே  நான் ஒரு கரிவேஷம்.

தலை வழியா சட்டைபோட்டால்,வீடே அதிரும் விஷயம்.
ஒரு கை எடுத்தால் மறு கை போய் விடும் எப்படி என் விஷமம்?

ஒரு வழியாக சட்டை போட்டு  விடுவாளே என் அம்மா பெருமூச்சு,
தோல்வி ஒப்புக்கொள்ளாமல் நானும் அலறுவேனே ஒரே மூச்சாய்.

என் கத்தலை கேடடு தாயே நீ என்னை அணைத்திடுவாய் மாறோட,
கழுத்தை திருப்பி பால் குடிக்க பசியுடன் தப்புவேனே நான் கூறோட.

ஆசை தீர பால் குடித்து தாயின் அணைப்பில் மயங்கிடுவேன் நான்.
என்னை கெட்டி அணைத்தவாறே என் தாயும் என் அழகை ரசித்திடுவாள்.
                                          சுபம்
                                      --------------
                                                                                ஜெயம் .
                                                                               11-4-2012.
                                                                               -----------------
 

Tuesday, 3 April 2012

சேயின் சேச்ட்டை

                           சேயின் சேச்ட்டை.
                         -----------------------------
திருமணம்  ஆகி வருஷங்கள் ஐந்து ஓடிவிட்டது,
தாய் ஆக வேண்டும் என்று மனம் ஏங்கி கொண்டது..

வேண்டினேன் கடவுளை இரவும் பகலுமாய்,
வேண்டுதல் அத்தனையும் செய்தேனே கடினமாய்.

கடவுளே கண் திறப்பாய்,பிறப்பாயா என் குழந்தையாய்
அழகும் ஆரோக்யமும் தீர்காயுச்சும் முழும்மையாய்.

ஆடுவேன் பாடுவேன் உனக்காகவே வாழுவேன்
உன்னை வளர்த்தி ஆளாக்கி  அறிவையும் ஊட்டுவேன்.

வந்துவிடு குழந்தாய்,என் வயற்றில்  கனியாய்,
பழமாகி விட்டதும் நீ  வெளியே வந்துவிடு  தனியாய்.

நீ ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
கடவுளின் பிரசாதமாய்  கருதுவேன்  நான் எந்நாளும்.


வந்துவிட்டேன் தாயே நீ அறியாமல் உன் வயற்றில் ,
காத்திரு பொறுமையாய்,என் வாஸம் முடியும் வரை,

நீ போடும் கீர்த்தனைகள் கேள்க்கிறேன்  நான் ஆனந்தமாய்
நீ போடும் கூச்சலையும் கேட்க்கிறேன் நான் கவனமாய்.

நான் பிறந்ததும் என் தாய் எனக்காக மட்டும் தான்,
என்னை விட்டு ஒருபொழுதும் நகரவும் விடமாட்டேன் .

படா பாடு படுத்துவேன் பார் உன்னை நான் தினம்தோறும்,
கண்ணில் நீர் வராமலே அலறி அடிச்சு அழுவேன் நான்,

என்னாச்சு என்று தெரியாமல் திரு திருவென்று முழிப்பாய் நீ,
ஓரக்கண்ணால் உன்னை பார்த்து அழகுடன் சிரிப்பேன் நான்.

நீ பசியுடன் சாப்பிட உன்  தட்டின் முன்  உட்க்காருவாய்,
அசுர பசியுடன் அலறுவேன் நான் உன் போஜன சத்ருவாய்.

அய்யோ பாவம் குழந்தை பசியுடன் அழுவுதே,
பால் ஊட்டிவிட்டுத்  தான் மறுவேலை என்கிறாய்.

பால் குடிக்கும் போதே நான் பீச்சி விடுவேனே,மஞ்சளாய்,
செய்வதறியாமல்  கதி கலங்கி நிர்ப்பாயே ,நீ பஞ்சறாய்.

குடிப்பதை நிறுத்தினால் நான் க்ரீச் என்று அழுவேனே,
குடுப்பதா பால்,எடுப்பதா,தெரியாமல் ஒரு தாயின் தவிப்பு.

பக்கத்தில் நின்றிருக்கும் பாட்டியிடம் கை மாறுவேன்
பால் வழிந்த முகத்துடன் பவிழ வாயால்  சிரிப்பேனே.

குழந்தையோ பாட்டி மடியில் கோழி தூககம் போடுகிறாள்,
நேரத்தை வீணாக்காமல் மகளே நீ போஜனம்,சாப்பிடுவாய்.
                                          சுபம்
                                          ----------