Sunday, 22 July 2012

அன்னிகாவின் அப்யாசம்.

                                                           
இந்த தர்த்தியில் நான் பிறந்து தொண்ணூறு நாள் ஓடிவிட்டது,
என் பெற்றோரின்  பெருமையோ எல்லை தாண்டி போய்விட்டது.

பதிமூன்றாவது நாளன்று என்னுடைய  பெயர் சூட்டு விழா நடந்தது,
தொட்டில் போட்டு காப்பணிந்து என்னை பார்க்க  ஊரெல்லாம் வந்தது.

அறுபது நாள் ஆயிற்றே,இன்னம் கழுத்து நிற்கவில்லையே கடவுளே?
லக்ஷ்மி க்ரயிண்டரை  போல்அல்லவா குழந்தையின் மண்டை ஆடுது?

என்னை பார்க்க வருவோரிடம்,கொள்ளின் டாபிக் என் மண்டை தான்,
தொண்டை கிழிய  பேசும் போது கொள்ளின் மண்டையும் ஆடுதே என் ?
அம்மாவுக்கும் கொள்ளு பாட்டிக்கும் வம்பு பேச வேறு விஷயமே இல்லையா?
நான் என்னா கொலுவில் வைத்து அழகு பார்க்கும் தஞ்சாவூர் பொம்மையா?

எனக்கென்று சில கொள்கைகள் இருப்பது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது,
எண்ணை தேத்து குளுப்பாட்டும்போது அம்மாவின் பாட்டை ரசித்திடுவேன்.

அம்மாவின் முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேகுளித்திடுவேன்,
குளித்த பிறகு அம்மா நறுமணம் கொண்ட ஜோன்சன் பௌடரை அப்பிடுவாள்.

மல்ட்டி களரில் பாபா சூட் போட்டு  எந்தன்  அழகை பார்த்து  ரசித்திடுவாள்,
என்னை அணைத்து முத்தம் கொடுத்து  கொள்ளிடம் மெல்ல தந்திடுவாள்.

கொள்ளும் ஆசையுடன்  என்னை  அணைத்து ரோக்கிங் செயரில் ஆடிடுவாள்,
கொள்ளின்  கையில் சுருண்டு படுத்து கொள்ளின் பாட்டில் மயங்கிடுவேன்.

தூககம் தெளிந்து பிரெஷ் ஆனதும் என்னை ப்ளே மாட்டில் போட்டிடுவாள்,
ப்ளே மாட்டில் படுத்ததும் நானும் என் கால்களை அடித்து விளையாடுவேன்.

கால்களை தூக்கி  மேலே வைத்து  கப்பல் சாய்வது போல் சரிந்துவிட்டேன்,
இன்று நான் பிறந்து மூன்றாவது மாதம் குப்ற மறிவதையும் கற்றுவிட்டேன்.

திடீர் என்று என் கொள்ளுப்பாட்டி என்னை காமறாவில் பிடித்து விட்டாள்,
கூடிய சீக்ரம் பார்ப்பீர்கள் நீங்கள் என்னை குப்பற போஸில் பெயிஸ் புக்கில்.

சரிந்து படுத்தால் என் கைகள் இரண்டும் என்  வாய்க்குள் நுழைய பரிச்ரமம்,
கட்டைவிரலை உள்ளே பூத்தி சப்பமுடியாமல் தவிக்கும் எந்தன் பராக்கிரமம்.

விரலை சப்பும் பராக்ரமத்தில் குப்ற மறிவதை சற்று மறந்தே விட்டேன்,
கிட்டே இருந்தும்  வாய்க்குள் நுழைய மறுப்பதேனோ  என் குஞ்சு  கரங்கள்?

வாயில் போடுவது  ஏன் கைகள் தான்  என்று எனக்கே இன்னம் தெரியாது,
ஒரு கைய்யால் மறு கையயை பிடித்து இழுத்து  வருவது எத்தனை சரமம்!

இரண்டு கைய்யும் சேர்ந்து வாயில் திணிப்பதும் ஒரு பகீரத பிரயத்தினம்,
வாயை நோக்கி வரும் கைகள் திசை மாறி  மூக்கை போய் இடிப்ப்தேன்?

மூக்கில் விழுந்த இடியின்  வலியால்  நான் அலறி புரண்டு அழுதிடுவேன்,
அக்கம்பக்கம் பார்த்து விட்டு தேடினேன் அம்மாவை என்  ஓரக்கண்ணால்.

அம்மா வந்தாள் வாரி எடுத்தாள்,முத்தம் கொடுத்து அணைத்து கொண்டாள்
ராக்கிங் செயறில் ஆடியவாறே பாடிகொண்டே எனக்கு தாய் பாலும்  ஊட்டினாள்.
                                                        சுபம் .
                                                       ---------------                                                       ஜெயம்.
                                                                                                                              22-7-2012.
                                                                                                                             -----------------

                   








Thursday, 12 July 2012

ஓட்டறைகுட்சி.

                                                                      
பரமனின் குடியிருப்பு ஒரு பிரம்மாண்டமான ஆறு மாடி கெட்டிடம்,
பரமன் வசிப்பது இரண்டு படுக்கை ரூம் கொண்ட இரண்டாவது மாடி.

பரமன் தடபுடலாக கால்களில் ஷூ போட்டு இறங்கி வந்தான் கீழே.
அவன் மூங்கில் மாளிகையின் அழகை பார்த்து ரசிக்கவந்தான் தாழே.

குண்டோட்டம் குதிரோட்டமாக ஓடி  வந்தான் அவன் தன் பிளாட்டிற்கு ,
குழந்தை ரசிகாவை தூக்கி போட்டு குதியோ குதி குதித்தான் தறையில்.

ஆறடி உயரவும் மிக பருமனான உடம்போடுகூடியவன் ஆச்சே பரமன்,
அவனுடைய கூச்சலும் குதித்தலும்  வீடே அதிரும் போல் ஓர் நடுக்கம்.

ஒன்றாம் மாடியில் வசிப்பவளோ ஒரு நடுவயது மாது  ஓர் தனி பிறவி,
யாரிடமும் ஓட்டும் உறவும் ஏதும் இல்லாமல் வஸிக்கும் ஸ்வயனலக்காரி.

பரமனின் தாண்டவம் அவளால் தங்கவே முடியாத்த பயங்கர கொலைவெறி.
எடுத்தாள் ஒட்டறை குச்சியை குத்தினாள் பரமனின் தட்டில் மேல் பலமுறை.

பரமன் நடக்குமிடமெல்லாம் கேக்குதே ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் ,
பரமன் முழித்தான்,புரண்டான் பொலம்பினான் பையித்தியம் பிடித்தவன் போல்.
அடுக்குமாடி கெட்டிடத்திலும் வருமா இது போல் ப்ரோப்ளம்
தரும் நிகழ்ச்சி?
படுத்து தூங்கவே பயப்படுகிறான் பரமன்,அந்த மாதுவின் கோலாட்ட பயிற்சி.
ரசிகாவை கொஞ்ச  தயங்கினான்,மனைவியிடம் குரல் கொடுத்து பேச
பயந்தான்,பிரமை பிடித்தவன் போல் தெரிந்தான் ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் கேடடு.
 
ஒருநாள் அவன் மாமன் வந்தான்,வேண்டுமென்றே அட்டஹசமாக சிரித்தான்,
சிரிப்பின் மொழக்கம் தாங்காமல் மாது படிஏறிவந்தாள் பரமனனின்  வீட்டிற்கு.

பரமனும் மாமனும் சேர்ந்து அடடஹாசமாக சிரித்தார்கள் மாதுவை பார்த்து,
வெளி உலகம் கண்ட பறவை போல் மாதுவின் மனமும் உல்லாசம் கொண்டது.

சிரித்தாள் அவளும் கூடவே வயிறு வெடிக்கும் வரை,சிரிப்பின் மகிமை எத்தனை?
பரமா நீ ஓடலாம் சாடலாம் சுதந்திரமாக,வேண்டாம் பயம் இனி ,என் ஓட்டற குச்சியால் 
 மாமா ,உங்களின் ராக்ஷஸ சிரிப்பில் கண்டேன் நான் மாதுவில் மனமாற்றத்தை,
எவ்வளவு சீக்ரம் பிரச்சனையை தீர்த்து வைத்தீர்கள் என் அருமை சங்கர்மாமா.

பரமா இதொன்றும் பெரிய விஷயமல்ல,நான் வருத்தம் அடைந்தால் சிரிப்பேன்,
நான் சிரிப்பதின் நோக்கமே என் கவலையை எவருக்கும்  தெரியாமல் இருக்க !!

பரமனும் படித்தான் ஒரு பாடம்,அவன் மாமாவின் சிரிப்பில் கலந்த ரகசியம்,
இனி பரமனும்  பதட்டம் அடையாமல்,சிரிதுகொண்டிருப்பது மிக அவசியம்.  
                              
                              சுபம்.
                              
                              ...........                                             ஜெயம் .
                              
                                                                                      13-7-2012.
                              
                                                                  

Tuesday, 10 July 2012

வேலி.

                                         
பரமனின் கூரையில்  சரமாரியாக கொட்டிதீர்த்தது கூழாங்கல் மழை,
குப்பனின் கோபமும் கொலைவெறியும் தான் இந்த கூழாங்கல்  மழை.

பரமன்  பவித்ரனோ பதட்டத்தில் புகார் புகைத்தான் போலீசிடம்,
போலீசும் மொம்மரமாக தேடி அலைந்தது குப்பன் இருக்குமிடம்.

ஒருநாள் அவனை பிடித்துவிட்டார்கள் காவல் துறை திடீர் என்று,
சிறிதும் அவன் எதிர்பார்க்காமல் ஏர்போர்ட் அருகில் பதுங்கி சென்று.

போலீஸிடம் சிக்கி திக்கு முக்காடினான் பாவம் கொலைவெறி குப்பன்.
முட்டிக்கு முட்டி தட்டி விழுந்தான் அவன் வலி தாங்காமல் குபறகுத்தி.

குப்பனின் தகப்பனோ முழிகள் பிதுங்க துர்வாசாவாக மாறிவிட்டான் ,
பரமனை நோக்கி பழிக்கு பழி வாங்க படை எடுக்க துணிந்து விட்டான்.

உன் மரத்தின் வேரினால் வந்தது என் வீட்டில் மிக பெரிய விரிசல்.
மரத்தை வெட்டு,வேலியை கெட்டு,விடமாட்டேன் உன்னை எளிதில்.

கெட்டிவிடுவோம் வேலியை உயரமாக உனக்கும் எனக்கும் நடுவில்,
வேலியின் செலவு நாம் இருவருக்கும் சமம்  என்றான் பரமன் முடிவில்.

குப்பனுடைய அப்பனும் வணங்கினான் வேலியின் செலவு வஹிக்க,
குப்பனும் நாய்களும் இனிமேல் பரமனின் கண்ணில் படாமல் இருக்க.

ஆள் உயரம் வேலி வந்தாலும் பரமனின் மனதில் இல்லையே நிம்மதி,
குள்ளனை நம்பலாம்  குப்பனை நம்பாதே என்று எச்சரித்தது அவன் மதி.

எலியை பயந்து இல்லம்  விற்ற  நம்பூதிரியின் கதை போல் தோன்றுதே,
குப்பனை பயந்து பரமனும் வீட்டை விற்றுவிடுவான் போல் தெரியுதே!

பரமன் மாட்டிகொண்டு முழிக்கிறான் மிகவும் பெரிய தர்மசங்கடத்தில்,
வீட்டை விற்றுவிட்டால் இனி வாங்கும் புதிய வீட்டின் ராசி எப்படியோ!

பரமன் புது வீடு வாங்கும் வேட்டையில் இரவும் பகலுமாய் அலைந்தான்,
நம்பூதிரி துப்பலை மெதிச்ச கதையை நினைத்து  கொஞ்சம் தயங்கினான்.

நம்பூதிரி  தெருவில் நடந்தான்  கால்களை தூக்கிவெச்சு மிக கவனத்துடன்,
எச்சிலை மெதிப்போமோ என்று பயத்துடன்  நடந்தார் அவர் மிக நாசூக்காக.

கடைசியில் அவர் பாதங்கள் மிதிச்சதோ சபக் என்று ஓர் எச்சில்துப்பலில்,
தன் புது வீட்டிலும் வந்திடுமோ பிரச்சனை பயந்தது அவன் மனம்,கடுப்பில்!

கவலையுடன் தென்பட்டான் பரமன் தான் குடும்பத்தின் பாதுகாப்பை தேடி,
கடந்ததெல்லாம் கடுகளவு,வரப்போவதோ ஒரு மலையளவு பரமனை நாடி!

வாங்கினான் பரமன் பிளாட் ஒன்று புத்தம் புதிது, அடுக்கு மாடி கெட்டிடத்தில்
தூங்கினான் பரமன் நிச்ச்சலமாக குப்பனோ வேலியோ கனவில் தென்படாமல்.
                                                 சுபம் .
                                                 ---------                                            ஜெயம்.
                                                                                                       11-7-2012
                                                                                                        --------------