Saturday, 16 June 2012

குப்பனின் கூத்தாட்டம் ,பரமனின் பதட்டம்.


பக்கத்து வீட்டு குப்பனின் அட்டஹாசம் போதை மருந்தின் மயக்கம்.
உயிர் தப்பி ஓடிவிட்டார்கள் அவன்  பெற்றோர்  மகனின்  ஹிம்சை தாங்காமல்.

போதை மருந்தில் சிக்கி தவிக்கிறான்  குப்பன் தர்ம சங்கடத்தில் ,
பெற்றோரையும் கொலை செய்ய  துணிந்துவிட்டான்  போதையின் வெறியில்.

பிஞ்சிலேயே  பெற்றோர்களின் பெரம்படி வாங்காமல்  வளந்ததின் விளைவுகள்  எத்தனை,
அறியாத வயதிலே அகப்பட்டு கொள்கிறான் வேண்டாத பழக்கத்தின் அடிமையாய்.


போதை மருந்தின் கிக்  ஏறிவிட்டால் எங்கிருந்து வருகிறது அசட்டு தய்ரியம்?
கல்லெறிந்து உடைத்துவிட்டான் அவன் பக்கத்து வீட்டு பரமனின் கண்ணாடி ஜனல்களை.

பரமனின் குணமோ ,ஒரு வம்புக்கும் போகாத கொவ்வாலா மாதிரி,
பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஒரு  வித்யாசமான  பிறவி.

பக்கத்து வீட்டு குப்பனின்  குரோதம்  பரமனுக்கு தொடை நடுக்கம்.
மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பதட்டம்.

போராகொறைக்கு பொன்னியும் வந்தாள் என்று சொல்வதை போல்
பக்கத்து வீட்டு புல் டாக் இரண்டு சுத்துது  மறுநாள் பரமனின் வீட்டில்.

பரமன்  பதட்டத்தில் எடுத்தான்,செலபோனை போலீசிடம் புகார் கொடுக்க,
பேச்சே வராமல் திக்கு முக்காடி வாயடைச்சு நின்றான் பரமன் கால்கடுக்க.

நாய்களை விரட்ட வாசல் கயிட்டை திறந்துவிட போகிறான் தயக்கமாய்
தப்பிக்க வழி இல்லாமல் நாய்கள் இரண்டும் பரக்கம் பாயுது பயத்தினால்,

பரமனை கண்டதும் வாலாட்டி கொண்டு அவன் மேல் பாயுது  இரண்டும்.
செல் போன் தெறிக்க பொத் என்று விழுந்தான் பரமன் அடைந்தான்.
மயக்கம்.

மயக்கம் தெளிந்ததும் பரமனின் உதடுகள் விறைத்து கொண்டு இருக்க,
கண் கலங்கி கேட்டானே ஒரு வார்த்தை ,என் குழந்தை ரசிகா  எங்கே?
வந்தாள் மனைவி  சிரித்துகொண்டேகொடுத்தாள் அவனிடம் ரசிகாவை,
மழலை சிரிப்புடன் வந்த ரசிகாவை  பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் பரமன்.
                                                    சுபம்
                                                   --------------                                           ஜெயம்.
                                                                                                               17-6-2012 
                                                                                                               -----------------

Tuesday, 12 June 2012

கண்டதெல்லாம் கனவா?

          

புத்தம் புதிய வீடு,பளங்குபோல் பளபளக்கும் டயில்ஸ்,
பிரமாண்டமான கிச்சென்,தேக்கில் இழைத்த வாசக்கால்

விசாலமான பெட் ரூம்ஸ் ஒவ்வொன்றுக்கும் தனி பாலக்கனி,
எதிரும் புதிரும் ப்ளாட்டுகள் ,எனக்கு வம்பு பேச நல்ல கம்பனி.

குடித்தனம்  வந்தோம் புது வீட்டிற்கு நாங்கள் இருவரும்,
வெளிநாட்டில் இருந்துவிட்டு  பசங்களுடன் பலவருஷம்.

சென்னை மண்ணில் அவர் பாதம் பதிஞ்ச அடுத்த நிமிஷமே
என் கணவரில்  கண்டேன் நான் அவர் நடையில் ஒரு மிடுக்கு.

கால் வலியால் துடிதுவிட்டார் அவர்  வெளிநாட்டின் குளிரில்,        வலியெல்லாம்  மயமாய் மறைந்தது தமிழ்நாட்டின் கத்திரியில்.

என் கணவன் காட்டும்  சுறுசுறுப்பில் நான் மெய் மறந்தேன்,
கையில் காப்பியுடன் கணவரை கண்டதும்  கண் திறந்தேன்.

பல் தேக்க வேண்டாம் ,பெட் காபி  குடிப்போமா நாமிருவரும்?
தேள் கொட்டினாப்போல்  வாய் பொத்தி நின்றேன் அதிர்ச்சியில்!!

வாசல் கதவை திறந்தேன் ,தெரிந்தது பளிச்சென்று மாக்கோலம்.
நம்பவே முடியாமல் சமையல் அறைக்கு சென்றேன்,அமக்களம்,

மேடையில் பார்த்தால் சமையலே முடித்த மாதிரி அல்லவா தோற்றம்,
சாம்பாறும்,பொரியலும் அப்பளமும் பொரித்து,கண்டேனே ஒரு மாற்றம்.

தொட்டியில் போட்ட பாத்திரங்கள்,எல்லாம் வாஷாகிவிட்டது ட்ரேயில்
துணிகள் அத்தனையும் மடித்து முடித்து அடுக்கி இருக்குது பீரோவில்.

ராதாவை கூப்பிட்டு செல் போனில் பேசினேன் என் கணவரின் மாற்றத்தை
பொல்லாத கனவில் தான் நீ பெத்துகிறாய் என்றாள் அவள் சந்தேகத்துடன்.

சந்தேக பேர்வழி நீ தாண்டி ராதா, என் கணவரை போல் ஒரு உத்தமர்  இல்லை,
வாடீ என் தொழீ,உனக்கு சந்தேஹமிருந்தால் என் வீட்டிற்கு வந்து தான் பாரேன்.

கொசு ஒன்று கடிக்க,பட்டென்று நான் அடிக்க செத்து விழுந்தது அந்த கொசு,
கொசுவலையில் சிக்கி  தப்பிக்க முடியாமல் உயிரை விட்டது அந்த கொசு.

மணி ஆகி விட்டதோ! தவறாமல் வந்துவிடும் ஜனலோரம் காக்காவின் சத்தம்,
கண்விழித்து கொண்டேன்,காலை காப்பிக்காக ஏங்கி நிற்கும் கணவரின் முகம்.

அப்பாடி ,கண்விழித்தாயா ஒருவழியாய், டைம் என்ன ஆச்சு என்று தெரியுமா,
கணவனை மறந்து அப்படி என்ன தூககம்,கனவேதும் கண்டாயா இன்பமாய்?

அய்யோ நான் கண்டது அத்தனையும் கனவா!  என் காலை கனவு பலிக்காதா?
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை,என்னிடம் உன் கனவு ஒருநாளும் பலிக்காது.
                                             சுபம்.
                                            .............                                                    ஜெயம் .
                                                                                                            10-6-2012.

Saturday, 9 June 2012

யார் அந்த முதல் தாய்.

                  


இந்த உலகமே துளும்பி வழியுது பெரும் மக்கள் துகையால்,
அந்த ஒவ்வொரு மனிதனும் ஜனிப்பது ஒரு தாயின் வழியாய்.

எத்தனை ஜன்மங்கள்,எத்தனை பிறவிகள்,யார் நம் முதல் தாய்?
பித்தனை போலவே பித்து பிடித்திடும் சிந்திக்க வைத்திடும் மெய்.

அதிசயம் இல்லையா இந்த ஸ்ருஷ்ட்டியின் பொல்லாத ரகசியம்?
பரஸ்யம் இல்லாமலே அந்த உண்மையை தேடுவேன் நிச்சயம்.

புழுவாய்,பூச்சியாய்,எறும்பாய்,நான் பிறந்திருக்கலாம் இல்லையா?
அப்பவும்  என் ஜனனத்துக்கு  காரணம் ஒரு தாய் தான் அல்லவா?

புழுக்கம் தாங்காமல் ஸ்வயம்பூ ஆக சேற்றில் உதிக்கும் ஒரு புழுவாய்,
புழுவிலிருந்து பிறவி எடுத்தவள் தானோ என்னவோ நம் முதல் தாய்!


புழுவாய் பிறந்து,வழி வழியாக மாறி,பல பிறவிகள் எடுத்து மனிதனாய்
ஜனித்து,உன் பூர்வீக தாய் யாரென்று கேட்க்கிறாய் அல்லவா குடிமகனே?

உன் கேள்விக்கு பதிலை நீயே கண்டுபிடித்திடுவாய்  உடனே என் மகனே!
மற்றவர்களை போல் இல்லாமல் ,சிந்தித்து  செய்வாய் உன் சாதனையை.

கண்ணனுக்கு மட்டும் தெரிகின்ற அத்தனை பிறவி  கர்மாக்களை பற்றி,
மின்னல் போல மறக்க வைக்கிறான் நம்மை, நாம் திரும்பி பாராமல் இருக்க..


கண்ணனிடம் நீ கைகூப்பி  கேட்டிடுவாய் உன் கர்மாவின் பின் கதையெல்லாம்,
ஒன்று விடாமல் சொல்லிவிடுவான்  கண்ணன் நீ அவனிடம் சரணடைந்தால் .



                                                           சுபம்.
                                                           ..........                                        ஜெயம்.
                                                                                                            10-6-2012

Wednesday, 6 June 2012

கடலோட்டம் ஒரு சிணுகாட்டம்.

                       


வெளிநாடுகளில் வஸிக்கும் மனிதர்களின் தினசரி வழக்கம்?
தினமும் திரௌபதி வஸ்த்ராபஹரணம் செய்து தான் பழக்கம்.

அய்யய்யோ திரௌபதி வஸ்தராபஹரணம் செய்வது எப்படி?
அதுவும் வெளிநாட்டில் திரௌபதிக்கு என்ன வேலை அப்படி?

உன்னைப்போல் ஒரு அப்பாவியும் இருப்பார்களா இவ்வுலகில்? 
வீடடுக்கு வீடு பார்ப்போமே  த்ரோ -பேதி -இந்த டோயலட்ரோல்.

காலையில் எழுந்ததும் தொடங்கிவிடும்  வஸ்த்ராபஹரணம் ,
ஆளுக்கு ஆளாக இழுத்திடும் டோயலேட் ரோள்ளபஹரணம்.

ஒரு ரோல் முடிந்தபின்  மற்றொரு  ரோல்லின் ஆவாஹனம்,
சத்தமே போடாமல் இழுத்திடும் மனிதனின் நித்ய அபயாசனம் .

மூட்டை மூட்டையாக வந்தெறங்கும் டோயலேட் ரோளுகள் ,
கொட்டை எழ்த்துடன் வாங்கி அடுக்குகிறான் ச்டோரூமுக்குள்.

இந்த ஒரு சாண் வயட்டிற்க்கு  நமக்கு இத்தனையும் தேவையா?
எட்ட்ருமதியும் இறக்குமதியும் இருக்கின்ற வரை நோ அதர் வே .

பொறந்த குழந்தைக்கு கூட டயபர் என்றோன்னு போடறாங்களே,
அந்த குழந்தையும் எப்பவும் போவது ட்ரோப்-பேதி -இன்னில் தானா?

டயபர் போட்டால் அப்பா அம்மாவின் டிரஸ் அசிங்கம் ஆகாது.
அனால் பாவம் அந்த குழந்தையின் பாரமோ தாங்க முடியாது.


முகமெல்லாம் சிவந்து விறயலுடன் குழந்தை போடுமே ஓர் அலறல்!
டயப்பறை கயற்றினதும்  குழந்தையின் முகத்தில் வருமே ஓர் ஆறுதல்.

கால்களை அடித்து தன் நன்றியை காட்டுவான் பாருங்கள் அது சூப்பர்.
அனால் அடுத்த நிமிடமே வந்துவிடும் அவன் எதிரி மற்றொரு டயபர்.

எப்போத்தான் எனக்கு கிடைக்கும்  டயப்பரில் இருந்து விமோசனம்?
தர்போதொன்றும் கிடையாது மவனே  அழுது என்ன பிரயோஜனம்?

அம்மாவிடம் கற்றுப்பேன்  நான் கூடிய சீகிரம் டோயலட் ட்ரைனிங்
அப்பறம் தான்  பார்ப்பீர்கள் நீங்கள்  எந்தன் செஷ்ட்டைகளின் பிகினிங் .

உன் செல் போன் வைக்கும் இடம் எனக்கு  தெரியும் அம்மா நிச்சயம்,
உன் செல்ல மகனை விட முக்யமா உனக்கு அந்த செல்போன் ,பத்திரம்.

பொழுது விடிந்ததும் நீ தேடுவாயே உன்  செல் போணை மொம்மரமாய்,
 பொழுது போகாமல் நின்றேனா,உடனே வந்தது ஓர் ஐடியா பம்பரமாய்.
சட்டென்று சென்றேன் எடுத்தேன் அம்மாவின்  செல்போணை
பட்டென்று போட்டு விட்டேன் அதை இங்க்லீஷ் கம்மோடில்.

அத்தோட விட்டேனா நான் என் துடிக்கும்  செஷ்ட்டையை
ஆசை தீர அமுத்திவிட்டேன் டோயலட்டின்  பிளஷ் பட்டணை .

பாட்டோன்றும் பாடினேன் நான்  அம்மாவின் காதருகே குயிலாட்டம்,
அம்மா உன் செல் போணோ கடலோட்டம் விடிஞ்சா தெரியும் சிணுக்காட்டம் .                                        சுபம்.
                                       ,,,,,,,,,,,,,                                                   ஜெயம்.
                                                                                                        7-6-2012.

Monday, 4 June 2012

விடாத பொறுப்பு..
             -----------------------------

பதினெட்டு வயதினில்  நுழைந்தேன் புகுந்த வீடு,
ஒரு ஹிந்து மஹா சமுத்திரம் அப்பா அந்த வீடு!!

கணவனின் கூட பிறந்தவர்களோ பன்னிரண்டு
வீட்டின் தோற்றமோ ஓர் கல்யாணமண்டபம்.

நாத்தனார்கள்  வருவார்கள் தன் கணவர்களுடன்,
குழந்தைகள் பட்டாளம் வீடெல்லாம் மழுமந்திரம்.

சமையல் செய்வதோ  மருமகளின் பொறுப்பு ,
சமையல் கட்டில் அடைந்து கிடக்கும் பிறப்பு.

காலை முதல் இரவு வரை அடுப்படியில் தவிப்பு.
உடுத்திருக்கும் சேலையால் வேர்வையை துடைத்து,

அப்பாடீ என்று ஒருநிமிஷம் இடுப்பை நிமர்த்தினேன்,
வந்துவிட்டதே குட்டி பட்டாளம் சமையல் அறைக்குள்.

முட்டை வடிவில் தட்டுகளை போட்டு கொட்டமடிக்கும்
குட்டி வாண்டுகளின் அட்டஹாசமோ என்னத்தை சொல்ல!

தட்டின் முன் உட்கார்ந்து வாண்டுகளின் அரட்டை அரங்கம்,
காகம் கூட்டில் கல் எறிந்ததுபோல் வரும் கரகரா சத்தம்.

சமைத்து வைப்பது எளிது,அனால் பரிமாறுவதோ சுத்தம்.!
சாப்பாட்டின் நடுவே வந்துவிடுமே வாண்டுகளின் யுத்தம்.

அடிபிடி சண்டை கைகலப்பு மூத்து தட்டெல்லாம் தெறிக்கும்,
 நான் பாடு பாட்டு சமைத்ததெல்லாம் பூ மழை போல் பறக்கும்.

சமையல் அறை முழுவதும் வெத்தும் பசயுமாக கிடப்பு,
வாரி தொடைத்து சுத்தம் செய்வதோ மருமகளின் பொறுப்பு.

வாண்டுகள் கச்சேரி முடிந்த பின் வருவது இன் லாஸ் பட்டாளம்,
அத்தனை பேருக்கும் பரிமாறி என் இடுப்புத்தான் கழண்டுவிடும்.

ருசியாக சமைத்தோம்,ருசியுடன் சாப்பிட்டார்கள் enpathum illai 
சாப்பாடா இது!உப்புக்கு சப்பாணி!சொல்வதில் குறைச்சலில்லை.

எப்போத்தான் விடுதலை கிடைக்கும் எனக்கு கடவுளே,
மைத்துனர் கொழுந்தனார் மனைவிகளுடன் சென்றதுபோல்?

கடவுளும் கண் திறந்தார்,கணவர் செல்கிறார் தலைநகரம்,
கூடவே மூட்டை முடிச்சுடன் செல்கிறேன் தனிக்குடித்தனம்
.
மூன்று செல்வங்களின் தாய் ஆகிவிட்டேன் அடுக்கடுக்காக,
கொழந்தைகளை வளர்த்தி கல்வி கொடுப்பது என் பொறுப்பு.

கல்வியும் கொடுத்தேன் நல்ல வேலையிலும்அமர்ந்தார்கள்.
கொழந்தைகள் மூவர்க்கும் திருமணம்  செய்து வைத்தேன்.

இத்துடன் விடவில்லையே ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி!
பேர குட்டிகளை பார்க்கும் பேபி சிட்டிங் என் அடுத்த நிகழ்ச்சி.

மகனும் ,மருமகளும் காலையில் வேலைக்கு கிளம்புவார்கள்.
நாரதர் போல் எப்பவும் காதருகில் செல் போன் இருக்கும்,

அவசரம் அவசரமாக குரை ஏற டிபின் உள்ளே இறங்கும்,
பக்கத்தில் காபியும் கையுமாய் தாய் சென்று நிற்ப்பாள்.

லஞ்ச் போகஸ் கையில் ஏந்தி இருவரும் ஒரே பாய்ச்சல்,
ஹெல்மெட் தரித்து ஸ்கூட்டரில் ஏறும் தினசரி ரிஹர்சல்.

வீடெல்லாம் பார்த்தால் அலங்கோலமாக கிடக்கும் காழ்ச்சி
ஒவ்வொன்றாய் சீரமைப்பது ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி.

மின்சாரத்தின் வரியோ உச்சாணியை தொட்டு விட்டது ,
ஆனால் அத்தனை லைட்டும் பானும் ஓட்டமாய் ஓடுது.

ஒவ்வொன்றாய் அணைக்கும் வேலையும் தாயின் பொறுப்பு,
சிக்கனம் தானே சேமிப்பின் தொடக்கம் இது என் எதிர்பார்ப்பு.

மருமகளாக வந்தேன்,மாமியார் ஆகியும் இன்றும் அதே ரோல் தான்
சிலநேரங்களில் சில முதியோர்களின் வாழ்க்கை அப்படித்தான்.

ஆரோக்யமாக இருக்கும் வரை கவலையே இல்லை நிச்சயம்,
நம் குடும்பத்திற்கு நாம் உதவுவதில் என்னதான் பெரிய அதிசயம்?

உயிர் இருக்கும் வரை உதவுவதுதான் என் மிக பெரிய லக்ஷியம்
என்னுயிர்க்குயிராய் நான் நேசிக்கும் என் குடும்பத்தின் ரகசியம்.

கடவுளே எனக்கு அளித்திடுவாய் ஒரு அனாயாசேன மரணம்,
பராச்ரயமின்றி வாழவேண்டும்,இது தான் என் நித்ய ஸ்மரணம்.

ஆலமரம் போல் துளிர்த்திட வேண்டும் என் குடும்ப களைகள்,
ஆணிவேர் போல் தாங்க வேண்டியது என் விடாத பொறுப்பு.
                                சுபம்
                             ,,,,,,,,,,,,,,,,,                                            ஜெயம்.
                                                                                          ,,,,,,,,,,,,,,,,

நடப்பின் ஞாபகம் .



பள்ளியில் படிக்கும் காலம்,அது ஓர் சுவர்ண காலம்,
யூனிபோம் இல்லாமலே பள்ளிக்கு போகும் நேரம்

பாவாடையும் ஜாக்கெட்டும் தன்னிஷ்டம் தரித்து,
சப்பலே இல்லாமல் பள்ளிக்கு போகும் சிட்டுக்கள்,

மழைக்காலம் வாந்தால் வீதி எல்லாம் கொழ கொழா
சேற்றில் கால் வைத்ததால் பாதமெல்லாம் வழ வழா .

முட்டுக்கு தண்ணீரில் பாவாடை தடுக்க நடந்திடும் ,
சிட்டுக்குருவிகள் போகின்ற பாதையோ வெகுதூரம்.

 ஒற்றையடி பாதையிலே நெல் விளையும் வயலினிலே
அடிமேல் அடி வைத்து சிட்டுக்கள் போகும் அழகைப் பார்.

கட்டெறும்பை போல் நகரும் சிறுமிகளின் நமிட்டு சிரிப்பு,
சட்டென்று திரும்பினால் குட்டைக்குள் விழிந்திடும் பிரமிப்பு.

தினசரி நடக்கும்  இந்த சிறுமிகளின்  ஒற்றையடி பாத யாத்திரை,
வருஷங்கள் பல ஆகியும் ஓர் புத்தம் புதிய அழியாத முத்திரை.

என்னை போல் என் தோழிகளும் நினைத்து பார்பார்களா பழசை?
பழசென்ன புதிதயும் கத கதையாக பேசுவோம் வா பைஸ் புக்கில்.

உன்னைத்தான் தேடுகிறோம் நாங்கள் பலநாளாய் பைஸ் புக்கில்,
வந்துவிட்டேன்  பைஸ் புக்கில் குடும்ப வரலாறை பேசுவோமா?
C போல்  அகந்திருந்த நம் நடப்பின் தூரம்  இப்போ O ஆகிவிட்டது,
பிரிவோம் சந்திப்போம் என்ற டீவீ சீரியல் போல் அல்லவா இருக்குது!
பாராத ஒருக்கா பார்த்தோமே ,பழகின பிறகும் பிரிந்தோமே?
இனி பிரிந்தால் பார்ப்போமா,மாட்டவே மாட்டோம் சொல்லட்டுமா?
                                        சுபம் .
                                      -------------                                    ஜெயம்,
                                                                                          5-6-2012