Thursday, 15 August 2013

நம்ம கோளாம்பி .

 
எண்பது வயதை தாண்டிவிட்ட வயதான முதியவர் ஒருவர் ,
தொப்பிளுக்கு மேலே உருண்டை சதை உதிப்பதை கவனித்தார்.

மருத்துவரிடம் காட்டி அது ஹரண்யா என்பதை அறிந்தார்,
உடனே சர்ஜரி பண்ணுவதே நல்லதென்றார்கள் மருத்துவர்களும்.

புதன் அன்று இரவு  அட்மிட்  பண்ணிவிட்டோம் மருத்தவமனையில்
எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நல்ல சொகுசான
டீலக்ஸ் ரூம்.
வசதியோ வசதி கவனிப்போ தடபுடலான சம்பந்தி உபசாரம் தான்,
வியாழன் அன்று ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றார்கள் பெரியவரை, 

ஒப்பறேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்று அறிவித்தார்கள் போனில்,
சுமார் மூன்று மணி மத்தியானம் மயக்கம் தெளிந்து ரூமுக்கு வந்துவிட்டார்..

சொந்த பந்தங்கள் சரமாரியாக விசிட் பண்ண தொடங்கிவிட்டார்கள் ,
வந்தவர்களை சுமுகமாக பேசி அனுப்பிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டோம்

பெரியவருக்கு வேண்டியதெல்லாம் பார்மஸியில் பொய் வாங்கிவந்தோம்.
வாங்கிய பொருளில் ஒன்று தான் ஆண்களுக்கு{portable male urinal can} வெக்கும் கோளாம்பி .

சனிகிழமை டாக்ட்டர் வந்து சர்ஜரி பண்ணின இடத்தை  நன்றாக பரிசோதித்தார் ,
சர்ஜரி சக்சஸ் இன்றே வீட்டுக்கு போகலாம்  டிச்ச்சார்ஜ் பண்ணிவிடுகிறேன் என்றார்.

பெரியவர் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் தெரியவில்லை டிச்ச்சார்ஜ் என்றதும்,
இவ்வளவு சீக்ரமே என்னை ஏன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார் இந்த டாக்டர்?

நான் மோஷன் போகும் வரை என்னை இங்கே வைத்திருப்பார்கள் நினைத்தேனே
அசோக் சுந்தரராமன் அப்படித்தானே சொல்லிகொண்டிருந்தார் சர்ஜிக்கல் சென்டரில்?

சனியன்று பெரியவரை இரண்டு மணியளவில் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.
மிகவும் கவனத்துடன் கொண்டுவந்த பொருள்களை  எல்லாம் பாக் பண்ணிவிட்டேன்.

கிளம்பும் பொது கேட்டேன் பெரியவரிடம் கொளாம்பியை அங்கேயே விட்டுவிடவா?
ஐயோ அது நம்ம செலவில் வாங்கிய கோளாம்பி ,அது நமக்கே ஸ்வந்தம் ஆக்கும்.

அப்படியாக டபிள் கவர்களில் போட்டு அருவருப்புடன் எடுத்துவந்தேன் கோளாம்பியை
வீடுவந்ததும் பெரியவர் கேட்ட முதல் கேள்வி எடுத்து வந்தாயா நம்ம கோளாம்பியை ?
நம்ம ஆட்டோ சிங்கார சென்னையில் வந்து விட்டது நம்ப முடியாத அதிசயம்,
ஆனால் நம்ம கோளாம்பி வீட்டுக்கு வந்தது அத்தனை பேருக்கும் ஓர் பரிஹாசம் !!!
                                      சுபம் .
                                  ---------------