Tuesday, 27 September 2011

அரசியல் நெருக்கடி.


                


சங்கடமான அரசியலை விட்டு சன்யாசம் தேட போறேன் ,
ப.ஜ.காவின் அட்டஹாசம் தாங்காமல் ஓட போறேன்.

ஓடி ஓடி  உழைக்கணம் ,லஞ்சத்தை ஒழிக்கணம்,
அண்ணாவை போலவே நானும் ஆண்டியாக வாழணம்.

கூட்டணி கக்ஷி தொல்லையோ ,போதுமடா சாமி,
போதாகுறைக்கு குழிதோண்டும் சுப்ரமண்யம் சாமி!!


பிரணாபின் நியூயார்க்பிரயாணம்,திடுக்கிடும் அவசியமோ?
பிரணாப்  பிரதமர்  சந்திப்பும் ஒரு சிதம்பர   ரகசியமோ?


பூனை போல் பதுங்கும் நம்ம பிரதமர் மௌன சிங்கை பாரு,
சிதம்பர ரகசியம் கேட்டால் புலியை போல பாய்கிறார் பாரு.

சிதம்பரத்தை எதிர்த்து விட்டால் பிரதமர் கோபம் கொள்வதேனோ?
சிதம்பரத்தின் ராஜினாமா பிரதமர் மறுப்பதும் ஏனோ?
 
சிதம்பரம் தன் குற்ற சம்மதம்  ஏற்று சொன்னால்,
பிரதமரும் அதில் மாட்டி கொள்வாரோ   பின்னால்?


சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்திருந்து பாப்போம்
அரசியல் வாதிகளின் விதியை துணிச்சலுடன் ரசிப்போம்.

கை நிறைய பணம் கிடைத்தால்,போதும் என்று சொல்லும் மனிதனும்  இல்லையே ,
வயறு நிறைய சோறு போட்டால் வாய் நிறைய வாழ்த்தாத மனிதனும் இல்லையே!!

சுபம் .
ஜெயம்.
28-9-2011

Thursday, 22 September 2011

காற்றா? காட்சியா?


            

 குளித்தேன்  குறி இட்டேன் ,பொன்னாடை அணிந்தேன்,
அமர்ந்தேன் த்யானத்தில் தர்பாசனத்தில்.

பூஜைக்கு கையில் பூ எடுத்தேன்,பூ மணம் வீசவில்லை.
சீரியல் ஓலி ஒன்று கணிர் என்று காதுக்குள் வீசுது.

மனம் அலை பாயுதே பக்கத்து அறைக்குள்.
எட்டி எட்டி பார்க்க மனம் துள்ளி விளையாடுதே,

என்னவென்று அறியாமல் மண்டையும் வெடிக்குதே!
பஞ்சாங்கம் பார்க்கும் சாக்கில் அறைக்குள் நுழைந்தேன்,

அம்மா பார்க்கும் "அம்மக்கிளி" மறைந்திருந்து பார்த்தேன்.
மலையாளம் கும்குமப்பூ பார்க்காமல் விடுவேனா?
அம்மாவுக்கு தெரியாமல் ஓரக்கண்னால் பார்ப்பேனே!

ஹரிச்சந்தனத்தில் மகாதேவன் படுபாவி வில்லனாம்,
உண்ணிமாயை என்ற பெண்ணோ பாவம் ஒரு அப்பாவி.

காலை முதல் இரவு வரை,தமிழ் சீரியல் பார்ப்பேன்,
பாத்து பாத்து சில சமயம் பாத்த படமே பார்ப்பேன்.

மொத்த படவும் பார்த்துவிட்டு என்னத்தை கண்டேன்?
பார்த்த படம் ஒன்றுமே ஞாபகவும் இல்லையே!

சீரியல் பார்த்துவிட்டு பித்து பிடித்த மனநிலை,
கொஞ்சநேரம் நடக்க போகவேண்டும் என்று தோன்றுது .

நான் போனவுடன் என் இடத்தில அம்மா வந்து அமருவாள்,
மணி கணக்கில் அவள் விரும்பி அரசியல் படிப்பாள்.

நெஞ்சத்தை தொட்டு சொல் அஞ்சாத மனமே,
காற்று உள்ளப்பவே தூற்றவா? காட்சிக்கு விலை கொடுக்கவா?

காற்றுக்கு என்ன பஞ்சம் ,மூச்சு விட்டால் காற்று தான்,
கண் இருக்கும் வரை தானே  காட்சியின் விலை மதிப்பு!

சின்னம் சிறு அசைகள் சிறகடிக்கும் அசைகள்,
உயிர் உள்ளவரை ஊட்டலாம் கண் குளிரும் காட்சியை.

உன் மனசாக்ஷி சொல்லுதேன் என் அருமை மவனே,
வாழ்க்கையின் மகிழ்ச்சியே கண் குளிரும் காட்சிதான்.

ஜெயம்.
23-9-2011

Sunday, 18 September 2011

உபவாஸ உண்டியல்.


     

மக்களே கேளுங்கள் முக்யமான செய்தி ஒன்று,
மோதியின் உபவாஸ வாசலில் ராக்ஷச உண்டியல் ஒன்று,

பூகோள வடிவில் இருக்குதாம் அந்த உண்டியல்,
கொட்டை எழுத்தில் எழுதியிருக்கும் வார்த்தை,

"சத்பாவனாவுக்கு அளிக்கும் உங்கள் சம்பாவனை "
போடுங்கள் உண்டியலில் பரந்த மனதுடன்,
மூன்று நாள் மட்டுமே தரப்படும் அவகாசம்.

ராக்ஷச உண்டியல் ஒன்று துளும்பினால்,
மற்றொரு ராக்ஷசி உண்டியலை வைப்போம் மக்களே,

யோசிக்காமல் போடுங்கள் உங்கள் நன்கொடை அத்தனையும்,
உண்டியலின் சாவி மோதியின் கைவசம் .
இது உங்கள் தலைவர் மோதியை போய் சேரும் அவகாசம்!!!

வந்தவர் அத்தனை பேருக்கும் சன்மானம் உண்டு ,
மோதியின் படம் போட்ட பிளாஸ்டிக் மோதிரம் ஒன்று.

மக்களே முந்துங்கள்,மோதியின் மோதிரம்,
அணிந்துவிட்டு பாடுங்கள் மோதியின் ஸ்தோத்திரம்.

"ஜெய் ஜெய் ஜெய் மோதியின் முட்டாள் மக்களே!
மூன்று ரூபாய் மட்டுமே மோதியின் மோதிரம்."
சுபம்
ஜெயம் .19-9-2011

மதம் பிடித்த மதம்


         
யானை மதம் கொண்டால் ஓடுமாம் பின்னோக்கி,
மனிதன் மதம் கொண்டால் ஓடுகிறான் முன்னோக்கி

அப்பாவி மக்களோ பொசுங்கி போகிறார் ஓடும் ரயிலில்,
பழிக்கு பழி ஒரே பல்லவி குஜராத் கலவரம் வீடுகளில்,

எல்லா மக்களும் ஒரு தாய் பெற்ற மக்கள் தானே ,
ஆண் ஜாதி பெண் ஜாதி இந்த இரண்டு ரகம் தானே,

ஹிந்து முஸ்லிம் என்று தேவையில்லாமல் மோதி,
பாவம் மோதி என்ற நரேந்திரனின் பட்டினி செய்தி,

கேட்டிர்களா இந்த புத்தம் புதிய புளித்த செய்தியை?
மோதியின் பட்டினி வரலாற்றின் நீண்ட லிஸ்ட்டை ?

அஞ்சு கோடி செலவில் பிரம்மாண்ட பந்தலில்,
எயர் கண்டிஷனும் பாஞ்சு மெத்தையும் பக்கத்தில்

நாடி பிடிக்க டக்ட்டர்கள் பத்துபேர் கூட்டத்தில்,
காலை பிடித்துவிட சம்ச்சாக்கள் நாலுபேர் போட்டியாம்,

எதுக்கப்பா மோதி உன்னுடைய இந்த கபட நாடகம்
தப்பு செய்தால் போது மன்னிப்பு தானப்பா ச்லாக்யம்.

புளித்து போய்விட்டது மந்த்ரிகளே உங்கள் நாட்டியம்,
முழித்து கொண்டு விட்டோம் ,போதும் உங்கள் ஆட்டம் .

பணமும் குமியுது மலைபோல் உங்களுடன் பாபமும் குமியுது ,
குவித்த பணமெல்லாம் ,சி.பி .ஐ.கையில் அல்லவா சிக்குகிறது

கேள்விமேல் கேளிவி கேடடு ,திண்டாடுகிறதே உங்கள் மூச்சு,
ஒழுக்கமாய் வாழ்ந்து விட்டால்,வேண்டாமே வீண் பேச்சு .

கும்பலில் கைவீசி,கும்பலுக்கு கை கூப்பி ,ஆகிவிட்டாய் நீ கோமாளி,
கும்பலின் வரிபணத்தில்அல்லவா உன் இந்த கோமாளி வேஷம்?

ரொம்பநாள் செல்லாது அப்பனே உன் வேஷமும் பித்தலாட்டமும் ,
தாமதம் இல்லாமல் வந்துவிடும் உங்களுக்கெல்லாம் சிறைவாசம்.

கொட்டாரம் வாழ்க்கை என்ன,கை சொடக்கில் கிட்டும் சேவை என்ன!!
எல்லாமே ஒரு கனவாய் மாறிவிடும் அப்பனே சிறையின் இருளில்!!!
ஜெயம்.18-9-2011