பக்கத்து வீட்டு குப்பனின் அட்டஹாசம் போதை மருந்தின் மயக்கம்.
உயிர் தப்பி ஓடிவிட்டார்கள் அவன் பெற்றோர் மகனின் ஹிம்சை தாங்காமல்.
போதை மருந்தில் சிக்கி தவிக்கிறான் குப்பன் தர்ம சங்கடத்தில் ,
பெற்றோரையும் கொலை செய்ய துணிந்துவிட்டான் போதையின் வெறியில்.
பிஞ்சிலேயே பெற்றோர்களின் பெரம்படி வாங்காமல் வளந்ததின் விளைவுகள் எத்தனை,
அறியாத வயதிலே அகப்பட்டு கொள்கிறான் வேண்டாத பழக்கத்தின் அடிமையாய்.
போதை மருந்தின் கிக் ஏறிவிட்டால் எங்கிருந்து வருகிறது அசட்டு தய்ரியம்?
கல்லெறிந்து உடைத்துவிட்டான் அவன் பக்கத்து வீட்டு பரமனின் கண்ணாடி ஜனல்களை.
பரமனின் குணமோ ,ஒரு வம்புக்கும் போகாத கொவ்வாலா மாதிரி,
பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஒரு வித்யாசமான பிறவி.
பக்கத்து வீட்டு குப்பனின் குரோதம் பரமனுக்கு தொடை நடுக்கம்.
மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பதட்டம்.
போராகொறைக்கு பொன்னியும் வந்தாள் என்று சொல்வதை போல்
பக்கத்து வீட்டு புல் டாக் இரண்டு சுத்துது மறுநாள் பரமனின் வீட்டில்.
பரமன் பதட்டத்தில் எடுத்தான்,செலபோனை போலீசிடம் புகார் கொடுக்க,
பேச்சே வராமல் திக்கு முக்காடி வாயடைச்சு நின்றான் பரமன் கால்கடுக்க.
நாய்களை விரட்ட வாசல் கயிட்டை திறந்துவிட போகிறான் தயக்கமாய்
தப்பிக்க வழி இல்லாமல் நாய்கள் இரண்டும் பரக்கம் பாயுது பயத்தினால்,
பரமனை கண்டதும் வாலாட்டி கொண்டு அவன் மேல் பாயுது இரண்டும்.
செல் போன் தெறிக்க பொத் என்று விழுந்தான் பரமன் அடைந்தான்.மயக்கம்.
மயக்கம் தெளிந்ததும் பரமனின் உதடுகள் விறைத்து கொண்டு இருக்க,
கண் கலங்கி கேட்டானே ஒரு வார்த்தை ,என் குழந்தை ரசிகா எங்கே?
வந்தாள் மனைவி சிரித்துகொண்டேகொடுத்தாள் அவனிடம் ரசிகாவை,
மழலை சிரிப்புடன் வந்த ரசிகாவை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் பரமன்.
சுபம்
-------------- ஜெயம்.
17-6-2012
-----------------
No comments:
Post a Comment