Thursday, 12 July 2012

ஓட்டறைகுட்சி.

                                                                      
பரமனின் குடியிருப்பு ஒரு பிரம்மாண்டமான ஆறு மாடி கெட்டிடம்,
பரமன் வசிப்பது இரண்டு படுக்கை ரூம் கொண்ட இரண்டாவது மாடி.

பரமன் தடபுடலாக கால்களில் ஷூ போட்டு இறங்கி வந்தான் கீழே.
அவன் மூங்கில் மாளிகையின் அழகை பார்த்து ரசிக்கவந்தான் தாழே.

குண்டோட்டம் குதிரோட்டமாக ஓடி  வந்தான் அவன் தன் பிளாட்டிற்கு ,
குழந்தை ரசிகாவை தூக்கி போட்டு குதியோ குதி குதித்தான் தறையில்.

ஆறடி உயரவும் மிக பருமனான உடம்போடுகூடியவன் ஆச்சே பரமன்,
அவனுடைய கூச்சலும் குதித்தலும்  வீடே அதிரும் போல் ஓர் நடுக்கம்.

ஒன்றாம் மாடியில் வசிப்பவளோ ஒரு நடுவயது மாது  ஓர் தனி பிறவி,
யாரிடமும் ஓட்டும் உறவும் ஏதும் இல்லாமல் வஸிக்கும் ஸ்வயனலக்காரி.

பரமனின் தாண்டவம் அவளால் தங்கவே முடியாத்த பயங்கர கொலைவெறி.
எடுத்தாள் ஒட்டறை குச்சியை குத்தினாள் பரமனின் தட்டில் மேல் பலமுறை.

பரமன் நடக்குமிடமெல்லாம் கேக்குதே ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் ,
பரமன் முழித்தான்,புரண்டான் பொலம்பினான் பையித்தியம் பிடித்தவன் போல்.
அடுக்குமாடி கெட்டிடத்திலும் வருமா இது போல் ப்ரோப்ளம்
தரும் நிகழ்ச்சி?
படுத்து தூங்கவே பயப்படுகிறான் பரமன்,அந்த மாதுவின் கோலாட்ட பயிற்சி.
ரசிகாவை கொஞ்ச  தயங்கினான்,மனைவியிடம் குரல் கொடுத்து பேச
பயந்தான்,பிரமை பிடித்தவன் போல் தெரிந்தான் ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் கேடடு.
 
ஒருநாள் அவன் மாமன் வந்தான்,வேண்டுமென்றே அட்டஹசமாக சிரித்தான்,
சிரிப்பின் மொழக்கம் தாங்காமல் மாது படிஏறிவந்தாள் பரமனனின்  வீட்டிற்கு.

பரமனும் மாமனும் சேர்ந்து அடடஹாசமாக சிரித்தார்கள் மாதுவை பார்த்து,
வெளி உலகம் கண்ட பறவை போல் மாதுவின் மனமும் உல்லாசம் கொண்டது.

சிரித்தாள் அவளும் கூடவே வயிறு வெடிக்கும் வரை,சிரிப்பின் மகிமை எத்தனை?
பரமா நீ ஓடலாம் சாடலாம் சுதந்திரமாக,வேண்டாம் பயம் இனி ,என் ஓட்டற குச்சியால் 
 மாமா ,உங்களின் ராக்ஷஸ சிரிப்பில் கண்டேன் நான் மாதுவில் மனமாற்றத்தை,
எவ்வளவு சீக்ரம் பிரச்சனையை தீர்த்து வைத்தீர்கள் என் அருமை சங்கர்மாமா.

பரமா இதொன்றும் பெரிய விஷயமல்ல,நான் வருத்தம் அடைந்தால் சிரிப்பேன்,
நான் சிரிப்பதின் நோக்கமே என் கவலையை எவருக்கும்  தெரியாமல் இருக்க !!

பரமனும் படித்தான் ஒரு பாடம்,அவன் மாமாவின் சிரிப்பில் கலந்த ரகசியம்,
இனி பரமனும்  பதட்டம் அடையாமல்,சிரிதுகொண்டிருப்பது மிக அவசியம்.  
                              
                              சுபம்.
                              
                              ...........                                             ஜெயம் .
                              
                                                                                      13-7-2012.
                              
                                                                  

No comments:

Post a Comment