Sunday, 22 July 2012

அன்னிகாவின் அப்யாசம்.

                                                           
இந்த தர்த்தியில் நான் பிறந்து தொண்ணூறு நாள் ஓடிவிட்டது,
என் பெற்றோரின்  பெருமையோ எல்லை தாண்டி போய்விட்டது.

பதிமூன்றாவது நாளன்று என்னுடைய  பெயர் சூட்டு விழா நடந்தது,
தொட்டில் போட்டு காப்பணிந்து என்னை பார்க்க  ஊரெல்லாம் வந்தது.

அறுபது நாள் ஆயிற்றே,இன்னம் கழுத்து நிற்கவில்லையே கடவுளே?
லக்ஷ்மி க்ரயிண்டரை  போல்அல்லவா குழந்தையின் மண்டை ஆடுது?

என்னை பார்க்க வருவோரிடம்,கொள்ளின் டாபிக் என் மண்டை தான்,
தொண்டை கிழிய  பேசும் போது கொள்ளின் மண்டையும் ஆடுதே என் ?
அம்மாவுக்கும் கொள்ளு பாட்டிக்கும் வம்பு பேச வேறு விஷயமே இல்லையா?
நான் என்னா கொலுவில் வைத்து அழகு பார்க்கும் தஞ்சாவூர் பொம்மையா?

எனக்கென்று சில கொள்கைகள் இருப்பது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது,
எண்ணை தேத்து குளுப்பாட்டும்போது அம்மாவின் பாட்டை ரசித்திடுவேன்.

அம்மாவின் முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேகுளித்திடுவேன்,
குளித்த பிறகு அம்மா நறுமணம் கொண்ட ஜோன்சன் பௌடரை அப்பிடுவாள்.

மல்ட்டி களரில் பாபா சூட் போட்டு  எந்தன்  அழகை பார்த்து  ரசித்திடுவாள்,
என்னை அணைத்து முத்தம் கொடுத்து  கொள்ளிடம் மெல்ல தந்திடுவாள்.

கொள்ளும் ஆசையுடன்  என்னை  அணைத்து ரோக்கிங் செயரில் ஆடிடுவாள்,
கொள்ளின்  கையில் சுருண்டு படுத்து கொள்ளின் பாட்டில் மயங்கிடுவேன்.

தூககம் தெளிந்து பிரெஷ் ஆனதும் என்னை ப்ளே மாட்டில் போட்டிடுவாள்,
ப்ளே மாட்டில் படுத்ததும் நானும் என் கால்களை அடித்து விளையாடுவேன்.

கால்களை தூக்கி  மேலே வைத்து  கப்பல் சாய்வது போல் சரிந்துவிட்டேன்,
இன்று நான் பிறந்து மூன்றாவது மாதம் குப்ற மறிவதையும் கற்றுவிட்டேன்.

திடீர் என்று என் கொள்ளுப்பாட்டி என்னை காமறாவில் பிடித்து விட்டாள்,
கூடிய சீக்ரம் பார்ப்பீர்கள் நீங்கள் என்னை குப்பற போஸில் பெயிஸ் புக்கில்.

சரிந்து படுத்தால் என் கைகள் இரண்டும் என்  வாய்க்குள் நுழைய பரிச்ரமம்,
கட்டைவிரலை உள்ளே பூத்தி சப்பமுடியாமல் தவிக்கும் எந்தன் பராக்கிரமம்.

விரலை சப்பும் பராக்ரமத்தில் குப்ற மறிவதை சற்று மறந்தே விட்டேன்,
கிட்டே இருந்தும்  வாய்க்குள் நுழைய மறுப்பதேனோ  என் குஞ்சு  கரங்கள்?

வாயில் போடுவது  ஏன் கைகள் தான்  என்று எனக்கே இன்னம் தெரியாது,
ஒரு கைய்யால் மறு கையயை பிடித்து இழுத்து  வருவது எத்தனை சரமம்!

இரண்டு கைய்யும் சேர்ந்து வாயில் திணிப்பதும் ஒரு பகீரத பிரயத்தினம்,
வாயை நோக்கி வரும் கைகள் திசை மாறி  மூக்கை போய் இடிப்ப்தேன்?

மூக்கில் விழுந்த இடியின்  வலியால்  நான் அலறி புரண்டு அழுதிடுவேன்,
அக்கம்பக்கம் பார்த்து விட்டு தேடினேன் அம்மாவை என்  ஓரக்கண்ணால்.

அம்மா வந்தாள் வாரி எடுத்தாள்,முத்தம் கொடுத்து அணைத்து கொண்டாள்
ராக்கிங் செயறில் ஆடியவாறே பாடிகொண்டே எனக்கு தாய் பாலும்  ஊட்டினாள்.
                                                        சுபம் .
                                                       ---------------                                                       ஜெயம்.
                                                                                                                              22-7-2012.
                                                                                                                             -----------------

                   








No comments:

Post a Comment