Tuesday, 10 April 2012

சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.

                 சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.
                   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                            

ஆராரோ ஆரிராரோ ஆரடிச்சாளோ என் சித்திர பைங்கிளியை,
யாருமே  அடிக்காமல் அழுவதேனோ என்னுயிர் கின்கிணியே.

அடிச்சாத்தான்  அழவேண்டும் என்று யார் அம்மா சொன்னது?
அழுத பிள்ளை தான் தக்கும் என்று நீ தானே சொல்லுவாய்.

அழுத பிள்ளைக்குத் தான் பால் என்று அடிக்கடி சொல்வதும் நீயே,
அறிந்திருந்தும்  வீணாக  கவலை படுவதில்அர்த்தமேயில்லையே.

அழுவேன்  நான் ஜோராக  எனக்கு  பசி எடுத்தால் மட்டுமே,
அழும்போது மூச்சு தெணறி  எனக்கு காக்காய்  ஜீவன் போய் விடுமே.

என் அலறலை கேடடு என் அருமை தாய்   கொழம்பிப்  போய் நிற்பாளே ,
கரைப் வாட்டர் பாட்டிலுடன் என் கொள்ளுப்பாட்டியும்  ஓடி வருவாளே.

பாட்டி என்னை தன் மடியில் நேசுக்கி அமர்த்தி பாலாடயால்  போட்டுவாள்,
கரைப் வாட்டரின்  சுவையை ரசித்து சப்பு கொட்டி கொள்ளுவேன் நான்.

குளுப்பாட்டும் போது நான் பார்ப்பது என் தாயின் முகம் மட்டுமே ,
என் தாயின் அழகை  ரசிப்பதிலும் இருக்குதே  ஒரு தனி சுகம்.

என் தாயின் முகத்தை நான் கண் கொட்டாமல் பார்ப்பேனே,
என் தாயைப் போலவே  நானும் ஒரு அழகி தானோ என்னவோ.

 என் உடம்பெல்லாம்  எண்ணை தேய்த்து  மசாஜும் பண்ணுவாள்,
தோசையை திருப்புவது போல் என்னை திருப்பி திருப்பி போடுவாள்.

இதெல்லாம் இப்போ எனக்கு ஒரு புத்தம் புதிய அனுபவம் அல்லவா,
நான் பெரியவள் ஆனதும்  என்னை ஜிம்முக்கு அனுப்புவாய் இல்லையா?

என் முகத்தில் மட்டும் சோப்பு தேய்த்து கெடுக்காதே என் ரசனையை.
என் முகத்தை விட்டு,உடம்பெல்லாம் போடுவாய் சோப்பின் வாசனையை,

பஞ்சு டவலால் தொடைத்து என்னை பஞ்சு மெத்தையில் போடுவாள்,தாய்,
 குளித்த குசியுடன் தாயை பார்த்து போக்கவாயால் சிருப்பேனே ஆவலாய்.

ஜோஹன்சன் பவுடர் அப்பி என்னை மணக்க மணக்க செய்வாயே அம்மா,
ஆஹா!  கைகாலுகளை அடித்து விளையாடும் என்னை கொஞ்சம் பாரம்மா!

கண்ணில் மை இடுவது மட்டும் எனக்கு பிடிக்காத விஷயம்,
இரு கைகளாலும் தட்டி கெட்டுவேனே  நான் ஒரு கரிவேஷம்.

தலை வழியா சட்டைபோட்டால்,வீடே அதிரும் விஷயம்.
ஒரு கை எடுத்தால் மறு கை போய் விடும் எப்படி என் விஷமம்?

ஒரு வழியாக சட்டை போட்டு  விடுவாளே என் அம்மா பெருமூச்சு,
தோல்வி ஒப்புக்கொள்ளாமல் நானும் அலறுவேனே ஒரே மூச்சாய்.

என் கத்தலை கேடடு தாயே நீ என்னை அணைத்திடுவாய் மாறோட,
கழுத்தை திருப்பி பால் குடிக்க பசியுடன் தப்புவேனே நான் கூறோட.

ஆசை தீர பால் குடித்து தாயின் அணைப்பில் மயங்கிடுவேன் நான்.
என்னை கெட்டி அணைத்தவாறே என் தாயும் என் அழகை ரசித்திடுவாள்.
                                          சுபம்
                                      --------------
                                                                                ஜெயம் .
                                                                               11-4-2012.
                                                                               -----------------
 

No comments:

Post a Comment