"'நான் " என்ற அஹந்தை நம்மிடம் இருந்தால
மோக்ஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.
எத்தனை பிறவி ,எத்தனை பிறவி ,பிஞ்சாகவும் பழமாகவும் ,
எத்தனை ஜன்மம் எத்தனை ஜன்மம் எடுத்தால் நீ தருவாய் மோக்ஷம்
எப்படி வாழ்ந்தால் தருவாய் மோக்ஷம்,
கடுவுளே சொல் குறைந்த பக்ஷம்.
நிச்சயம் உண்டு உனக்கு மோக்ஷம் ,
கொஞ்சம் கொஞ்சமாய் உன் அஹந்தையை துறந்து ,
நீ ஒரு ஞானியாய் பழமாய் வாழ்க்கையில் கலந்து,
அத்தனை பேருக்கும் நன்மையை செய்து எளிமையாய் வாழ்ந்து ,
உண்மையை பேசி,கடவுளை நம்பி அஹிம்சையுடன் பகிர்ந்து ,
இரவும் பகலும் , கடவுளை நினைந்து
ஏங்கி உருகி பிரார்த்தனை செய்து
மனசா வச்சா, கர்மணா,ஒரு பிராணிக்கும் த்ரோஹம் செய்யலால் ,சதா உன்னை தியாகம் செய்தாய் அனால் கிடைக்கும் மோக்ஷம் ,என்கிறார் இறைவன்.
அனால் அது , உன் கர்மத்தை பொறுத்தது. ஏதாவது ஒரு பிறவியில் நீ ஒரு மகானாய் பிறந்து,தன்னிலம் இல்லாமல் , பிறர்க்காக உழைத்து ,சரீரம் "நான்" அல்ல "நான் " என்றது ஆத்மாதான்,இந்த உண்மையை ,நீ அறிவாய் அனால் அடையுவாய் மோக்ஷம், உடனே தருவேன்.
அஹந்தையை துறப்பது முடியுமா நம்மால்?
இந்த சம்சார ஸாகரத்தில் முழுகிய நம்மால்,
நான் என்ற நினைப்பு அனுதினம் வந்து ,
ஆயிரம் தடவை நம் புகழ் பாடி
நான் அதை செய்தேன் நான் இதை செய்தேன்,பாராட்டு பெற்றேன் .
நம் புகழ் நாமே பாராட்டி பேசுவோம்,
பிறர் அதை கெட்டு அசை போட வேண்டும்,
நீ என்ன செய்வாய் அது உன் ச்வயநிலம் .
"நான்" என்ற அஹன்தையின் தனி நிறம்.
வாரம் ஒரு முறை இருந்து பார் மௌனம்,
அப்போது தெரியும் மௌனத்தின் தனி பலம் ,
மௌனம் காப்பது நல்ல உடல் பயிற்சி ,
"சும்மா இரு என்பது ரமணரின் பயிற்சி ,
ரமணரின் வார்த்தை உபதேச ஸாரம்,
எல்லா யுகத்திலும் நிலைத்த ஸாரம்.
ஜெயம்
24-5-2011
No comments:
Post a Comment