Monday, 13 June 2011

பச்சை இலையின் பரிஹாசம்

 வந்தாளே ஆட்சிக்கு செக்க செவேன்னு ஒருவள்,
கருப்பு கண்ணாடியின் அட்டஹாசம் தாங்காமல்,
இத்தாலியை  சேர்ந்த சதுர்முகி ஒருவள்,
சொன்னாளே இவளுக்கு வெற்ற்யின் வாழ்த்துக்கள்..

ஆங்காரம்  கொண்ட கருப்பு  கண்ணாடியோ ,
அழுத முகத்துடன்  தலை நகர் சென்றார்.
பாவம்  தன் மகளை சிறையில் கண்டார்,
துக்கம்  தாங்காமல் உறைந்து நின்றார்.

காங்கிரஸ்  ஆட்சியோ கொண்டாடினார்கள்,
ஆட்சியின் இரண்டாவது பிறந்த நாள் டின்னர் .
அழைப்பு  வந்தது  டி. எம். கே  கட்சிக்கும் ,
சி! யார் போவார்கள்  இந்த டின்னர் கசக்கும் .

எனக்கு யாரும் நண்பர்கள் இல்லை,
ஆபத்து நேரத்தில்  கப்பாத்தவில்லை,
யாருக்கு வேணம் உங்கள் முதலை கண்ணீர்
போங்கடா போங்க அம்மாவின் கூஜா தண்ணீர்.

நீங்களும் வருவீர் என் மகளுக்கு துணையாய்
ஒவோருத்தராக  வரிசை வரிசையாய்.
எத்தனை ஆண்டுகள் சிறை வாஸம் உண்டோ?
அத்தனை  பேருக்கும் அனுபவம் உண்டு.

 பச்சை இலை கேலியாய்  இன்று சிரித்தது,
பழுத்த இலை விழுந்ததும் ,பரிகாசம் கொண்டது,
சிரிப்பாய் சிரிப்பாய் இன்று நீ சிரிப்பாய் ,
நாளைக்கு  உன்கதியும் இதுதான் வழியாய் .

எக்கேடும் கெட்டு  போங்கடா ,ஒரு வசம்,
வேண்டாம்  எனக்கு உங்கள் சஹாவாசம்,
போதுமடா சாமி போதுமே போதும் ,
இனி எனக்கு  க்ரஹ  வாஸம் போதும்.

ஜெயம் 25-5-2011

No comments:

Post a Comment