Tuesday, 19 July 2011

ஆனந்த சிலந்தி.

              
       


குறுக்கும் நடுக்கும் ஓடுதாம் சிலந்தி பூச்சி
மிகவும் சிறப்பாக பின்னுதாம் நெட்வர்க்.

வலையின் அமர்ந்து செய்யுதாம் த்யானம்,
கண் ஒன்றை மூடி மறு கண்ணை திறந்து,

வலை வீசி காக்குதாம் இரையை பிடிக்க,
தானாக  சிக்குகிறது சிலந்தியின் இரைகள்.

மாட்டித்தாம் இரைகள்  ஆயிர கணக்கில்,
சிலந்திக்கோ கொண்டாட்டம்,இரைக்கோ திண்டாட்டம்.

கெட்டி போட்டுதாம் ஆண் பெண் பாராமல் ,
உடம்புக்கே ஸ்வந்தமான பசையான நூலால் .
             
வலையில் சிக்கி தவிக்குதாம் இரைகள்,
மாட்டி கொண்டோமே இனி என்ன செய்வது?

ஆனந்தம் பரமானந்தம்,சச்சிதானந்தமாம்,
சிலந்தியின் அவதாரமோ நித்யானந்தனும்?

பவனி வருகிறான் ரத்ன சிம்ஹாசனத்தில்
கையில் ஒரு தண்டமும்,வாயெல்லாம் பல்லுமாய் .


தங்க கிரீடமும்,பட்டு வேஷ்டியும் தரித்து,
அசட்டு சிரிப்புடன்,பெண்களை பார்ப்பதும்,

அய்யோ கடவுளே அருவெறுப்பா இருக்குதே
சிறையில் கிடந்தும்  திருந்தவில்லையே என்?  
         
குண்டலினி சக்தியால்,மிதக்க வைக்கிறேன்,
வஜ்ராசனத்தில் அமர்ந்து குதியுங்கள் ஷீடரே

விரித்த முடியுடன் ஆவேசமாய் ஆடுங்கள்,
கழுத்து சுளுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

தவக்களை போல் குதித்து வாருங்கள்,
குதூகலத்துடன் என் பக்கம் வாருங்கள்,
குண்டலியின் சக்தி உங்களுக்கே தெரியும்.

கங்காருவை போல் உயரத்தில் குதியுங்கள்,
அத்தனை பேரையும் ஆலிங்கனம் செய்கிறேன்.


வானில் மிதக்கலாம் , பறவை போல் பறக்கலாம்,
குண்டலினி சக்தியால் சொர்கமே போகலாம்.

அத்தனை பேருக்கும் அனுபவம் ஆனந்தம்,
ஒத்தர் ஒத்தர் ஆக என் அறைக்குள் வாருங்கள்.

காட்டுகிறேன் என் ஞான திருஷ்ட்டியால்,
உங்களுக்கெல்லாம் என் விஸ்வரூபத்தை.!!

மக்களே உங்களுக்கு புத்தியே இல்லையா?
ஏமாந்து போகவே ஜன்மம் எடுத்தீர்களா?

காவி அணிந்தவர் கடவுளா என்னா? 
உதர நிமித்தம் பஹு கருத வேஷமாம்.

ஏமாந்த மக்கள் இருக்கின்ற காலம்,
எமாத்துவதற்கே இந்த காவி வஸ்த்ரம்.

விழித்து கொள்ளுங்கள் மக்களே சீக்ரமாய்,
கிழித்து விடுங்கள் அவன் போலி வேஷத்தை

ஜெயம் .
20-7-2011.

No comments:

Post a Comment