Thursday, 18 April 2013

வாழ்க கோபாலன் வாழ்க மைதிலீ


                     -----------------------------------------------------------
சீ கெ எஸ் குடும்பத்தில் ஆண் குழந்தைகளில் ஐந்தாவது புத்திரன் கோபாலன்.
மற்று அண்ணன்களை போல் இல்லாமல் சாந்த குணம் படைத்தவன் இவன்.

ஊர் சுத்தாமல் வீட்டில் தாய்  தந்தைக்கு உதவும் நற்குணம் படைத்தவன்,
தான் உண்டு தன வேலை உண்டு என்று வீட்டில் அடங்கி கிடப்பான் கோபாலன்

ஒருநாள் அவன் அண்ணன் ராஜா மத்தியானம் நன்றாக உறங்கிவிட்டான்.,
கோபாலன் அண்ணனை ஏமாற்ற ஒரு உபாயம் ச
ட் என்று கண்டெடுத்தான்.

ராஜா எழுந்திரு பொழுது விடிஞ்சாச்சு பல் தேது குளித்து வா உடனே என்றான்,
அண்ணனும் தூக்க பிச்சில் பல் தேத்து குளித்து குறி இட்டும் வந்துவிட்டான்.

கோபாலன் அண்ணனை பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்து விட்டான்.,
அதை பார்த்ததும் அவர்கள் தந்தை மிகவும் கோபத்துடன் ஓடிவந்தார்.

கொஞ்சமும் எதிர்பார்க்காமல் குச்சியை எடுத்து அடித்துவிட்டார் கோபாலனை,
பாவம் கோபாலன்,வேடிக்கையாக விளையாடினது வினையாக மாறிவிட்டது.

கொஞ்சநாள் கழித்து கோபாலனும் துரையும் தோட்டத்தில் வேலை செய்ய போனார்கள்,
துரை மம்மட்டியால் ஓங்கி மண்ணை வெட்டப்போய் கோபாலனின் மண்டையில் பட்டது,

முன்மண்டையில் வெட்டு பட்டு ரத்தம் நதியாக ஒழுக துரை தப்பித்து ஓடிவிட்டான்.
பக்கத்து வீட்டு நாயர் தான் அவனை தூக்கி ஆசுபத்திரிக்கு எடுத்துசென்றான்

உடனே டாக்ட்டரும் கோபாலனின் மண்டையில் தையல் போட்டு அனுப்பிவைத்தார்.
இப்பவும் சூழ்ந்து கவனித்தால் தெரியும் கோபாலின் மண்டையில்  வெட்டின் வடு.
என் அண்ணன்கள் நாலுபேருக்கும் கல்யாணம் ஆகி செல்வங்களும் பிறந்தாச்சு,

முப்பது வயதாகியும் என் பெற்றோர்கள் என் ஜாதகத்தை  எடுக்கவில்லையே ஏன் ?

என் கொழுந்தன் கோபாலனுக்கு கல்யாணமே ஆகாதோ என்ற பயம் வந்துவிட்டது,
என்னிடம் வந்து கேட்டார் நல்ல பெண் யாரவது இருக்காளா உங்கள் அறிவில்?

கவலைபடாதே தம்பி உனக்கும் வியாழ தசை நெருங்கி விட்டது என் அறிவில்,
சீக்ரமே விவாஹ ப்ராப்தி அடைய நான் கடவுளை வேண்டுகிறேன் என்றேன்.
என் பிரார்த்தனை வீண் போகவில்லை கோபாலன் கல்யாணம் நிச்சயமாயிற்று.
மைதிலி என்றும் ரோஜா நிறத்தில் கிளிபோல் போல் இருக்கும் ஓர் அழகியுடன் .

மெல்லிய இடையுடன் மூக்கும் முழியுமாய் வந்தாள் மைதிலி  ஐந்தாவது மருமகளாக,
அடக்க ஒழுக்கத்துடன் வந்து புகுந்த வீட்டில் சீக்ரமே நல்ல பெயர் எடுத்துவிட்டாள்

 கொழுந்தன் கோபாலனுக்கு குதூகலத்தில் வாயில் வார்த்தையே நுழையவில்லை ,
மைதிலியின் "தி " என்ற வார்த்தையை முழுங்கி ,மைலீ என்று ஆசையாக அழைத்தான்.

மைதிலியோ தன் கணவரின் அழைப்புக்கு பதில் அளித்தாள் என்னெங் -"கோ" என்று.
கோவும் மயிலியும் சேர்ந்ததின்  பிரதிபலிப்புத்தான் லக்ஷ்மி என்ற சீமந்த புத்ரி.


நெல்லூரில் நடந்தது என் பெரிய மச்சினர் மகள் சீதாவின் திருமணம்,
மைதிலி  நிறைமாஸ கர்பிணி இரண்டாவது பிரசவதுக்குள்ள பயணம்.

நீ தான் ஒழிஞ்ச கப்பல் தற்போது உன்னைத்தான் நம்பி இருக்கோம் நாங்கள்,
கல்யாணம் நெல்லூரில் வைத்து, உன் உதவி வேண்டும் என்றான் கோபாலன்.
.
கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது  கட்டிசாதமும் போயாச்சு,
நான் மட்டும் மிஞ்சினேன் நெல்லூரில் மைதிலிக்கு ஒத்தாசைக்கு .
குருவாயூர் உண்ணிகிருஷ்ணன் ஒரு  நவநீத பிரியன் அல்லவா?
நம் கோபாலக்ரிஷ்ணனும் ஒரு பால்கோவா பிரியன் தெரியுமா?

ஒக்கலில் குழந்தை லக்ஷ்மியையும் ஏந்தி அடிக்கடி பீரோவைதிறப்பதை பார்ப்பேன்,
நம்மை யாராவது கவனிக்கிறார்களா என்று நோட்டமிடுவான் பால்கோவா "லன் .

சம்படத்தில் இருந்து ஒரு நெல்லிக்காய் அளவு பால்கோவா   தன்  வாயில்,
இன்னம் ஒரு சுண்டக்காய்  அளவு பால்கோவா  குழந்தையின் வாயில்.

ஒன்றும் அறியாதவன் போல்,பீரோவை பூட்டி  மூளி பாட்டுடன் ஆளை விடுவான்,கள்ளன் 
இதெல்லாம் பார்த்து ரசித்தவள் நான் ஒருத்தி இருக்கிறேன் என்று இன்று அறிவாய் கண்ணா.

 விஷு அன்று சித்தப்பாவை சாஷ்ட்டங்கமாக நமஸ்கரிப்பார்கள் பசங்கள் ,
ஆளுக்கு 25 paisa  கொடுத்து சித்தப்பாவும் ஆனந்தமாய் ஆசீர்வதிப்பான்.

விளயன்நூர் மீசை மணியின் கல்யாணம் அழைப்பு வந்தது எல்லோருக்கும்,
அனால் கல்யாணத்துக்கு நானும் என் கணவரும் மட்டும் தான் போயிருந்தோம்.

பதினைந்து ரூபாயை கவரில் இட்டு கல்யாண பரிசாக ஓதினோம் எப்படி?
சிவரமக்ருஷ்ண,சுந்தர ராஜா தொரை கோபால பாலனுடைய ஆசீர்வாதம்!!!.

மைதிலியும் நானும் ஹைதராபாதில் காச்சிகுடாவில் வசித்து வந்தோம்,
இருவரும் இடைவேளையில் பல விஷயங்களும் பகிர்ந்துகொள்ளுவோம் .

ஒருநாள் நான் பாத்ரா என்று ஒரு புதிய சப்ஜியை முதல் முதலாக பண்ணினேன்,
மசால் பைச்டை சேம்பின் இலையில் தடவி சுருட்டி கட் செய்து ஆவியில் வெக்கணும்.

சப்ஜி தயார் ஆனதும் கடவுள் கோபாலனை அனுப்பிவைத்தார் டயிஸ்ட் பார்க்க,
ஒரு தட்டில் பரோட்டாவும் பாத்றாவும்  வைத்து கோபாலனிடம் கொடுத்தேன்.

அவன் சாப்பிடும் பொது அவன் முகத்தை சூக்ஷ்மமாக கவனித்து கொண்டிருந்தேன்,
ஒரு வாய் பாத்ரா சாப்பிட்டு "தூ-ஊ  "என்று காறி  ஒரு துப்பு கொடுத்தான் கோபாலன்.

நான் ஒருநிமிஷம் திக்கு முக்காடி போய்விட்டேன் கோபாலின் செயலை பார்த்து,
தலையை வழுக்க மொட்டை அடித்திருந்தான் அன்று,அதின் ரியாக்க்ஷணோ என்னவோ?
நாங்கள் எல்லோரும் எங்கள் மாமியார் கனகாபிஷேகதுக்கு  சென்னை சென்றோம்.
திரும்பும்போது என்கணவர் ஒரு ட்ரெயினில், ,நாங்கள் ஸ்பெஷல் ட்ரெயினில் வந்தோம்.

 விஜயவாடா வந்ததும்  கோபாலன் என்னை அழைத்து கணவரின் ட்ரெயினில்ஏத்தி விட்டான்.
என் கணவரோ ஏழு ரூபாய் அதிகம் தர மறுத்து என்னை  இறக்கி விட்டு திருப்பி அனுப்பினார்.

இரவு ஒருமணி சமயம்,என்னிடம் பேட்ட பைசா இல்லை,தல தெறிக்க திரும்பி ஓடினேன்,
நல்லவேளை எங்கள் வண்டி நின்றுகொண்டிருந்தது,ஏதோ பெட்டியில் குதித்து ஏறினேன்.

அப்படியாக அண்ணனும் தம்பியுமாக ஏத்தி இறக்கினாள் இஸ்வரியாம் தேவியை.
சூடான வடையுடன் நான் கோபாலன் இருக்கும் பெட்டியில் வந்துசேர்ந்தேன் சமத்தாக .


மைதிலி ஒரு மிடுக்கும் சுறுசுறுப்பும் நிறைந்த ஒரு குடும்ப தலைவி,
ஆசைக்கு ஒரு மகளும் ஆஸ்திக்கு ஒரு மகனையும் அழகாக வளத்தா
ள்


கத்தாமல் அடிக்காமல் முழிகளால் பேசியே குழந்தைகளை அடக்கிவிடுவாள்
நாட்யத்தில் அரங்கேற்றினாள் தன மகளை,மகனை வெளிநாடுக்கு அனுப்பினாள்

மகனுடன் யு எஸ் போய் கோபாலன் ஒரு வேத வித்தாக மாறிவிட்டான் தற்சமயம்,
யு எஸ்ஸில் ஒரு கோவிலுக்கே கார்யகர்த்தாவாக தேர்ந்து எடுக்கபட்டார் மக்களால் .

தம்பதி பூஜை என்றாலே  அது கோபாலகிருஷ்ணன் மைதிலி தம்பதிதான்.
யு எஸ்ஸில் பிரசித்தமாகிவிட்டார்கள் மைலி கோபாலகிருஷ்ணன் தம்பதி.யு எச்சில் கார் ஒட்டி ஜம் என்று  லய்சென்ச்சும் வாங்கி விட்டான் கோபாலன், மகிழ்ச்சியாக மனைவியுடன் மிடுக்காக ஊர் சுத்துகிறான் சொந்தம் காறில் .

இன்று மெய்ட் போர் ஈச் அதர் ஆக ஐம்பதாவது வெட்டிங் டே கொண்டாடுவதுபோல்,
வரும் ஒவ்வொரு ஐந்தாவது வருஷவும் நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்,

மைதிலி கோபாலக்ருஷ்ண தம்பதிகளை நாம்  மனமாற ஆசீர்வதிப்போம் ,
இதுபோல் ஒவ்வொரு சந்திப்பிற்கும் நம்மை கடவுள் அனுக்ரஹிக்கட்டும் .

மகள் லக்ஷ்மியும் மகன் ரவியுமாய் நடத்தும் இந்த சுப முஹூர்த்தம் ,வாழ்க!
மைதிலி கோபாலக்ருஷ்ணன் தம்பதிகள் ஆரோக்யத்துடன் நீடூழி வாழ்க!!
                                                                                                                                                By ஜெயம் &ராஜா

No comments:

Post a Comment